ராஜபக்ஷேவை உடன் விஜய்க்கு இருக்கும் கள்ள உறவு…. விஜய்யின் இந்த செயல் ஒட்டுமொத்த தமிழருக்கும் எதிரானது..

0
Follow on Google News

நடிகர் விஜய் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று வரை எத்தனையோ விமர்சனங்கள் மற்றும் தோல்விகளைச் சந்தித்து வந்தாலும், அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான லியோ படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்திருந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The greatest of all time’ படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் நடிகை லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், விஜய் தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அது மட்டுமின்றி தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரையும் அறிவித்து, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் விஜய்யின் படங்களை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே, படத்தின் 50 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. மேலும் ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது. அடுத்த கட்டமாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் விஜய் சூட்டிங் காக இலங்கைக்கு சென்றால் அவரைச் சந்திக்க ராஜபக்சே குடும்பத்தினர் ஆர்வமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் விஜய் புதிதாக கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில், ராஜபக்சேவை சந்தித்தால் அது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் ஏற்கனவே ராஜபக்சே உடன் விஜய்க்கு தொழில் ரீதியாக கள்ள உறவு உள்ளது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், விஜய் – ராஜபக்சே சந்திப்பு நடைபெற்றால், அது ஒட்டு மொத்த தமிழருக்கும் எதிரான செயலாக விஜய் அரசியலுக்கே ஆபத்து வரும் என எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.