இமான் மனைவி விவகாரம்… பயந்து கொண்டு விஜகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த வராத சிவகார்த்திகேயன்..

0
Follow on Google News

பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சினிமாவை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் விமர்சித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரஜினி தொடங்கி அஜித், விஜய், சூர்யா, கார்த்தி என பல பிரபலங்களையும் ட்ரோல் செய்வார் ப்ளூ சட்டை மாறன். இமான் சர்ச்சை தொடங்கியதில் இருந்து சிவகார்த்திகேயனை பிடித்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன், அடிக்கடி சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து ட்வீட் போட்டு வந்தார்.

அதன் பிறகு பருத்திவீரன் சர்ச்சை தொடங்கியதில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு ஓய்வு கொடுத்திருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

திரை பயணத்தை தொடங்கியதில் இருந்து எந்த சர்ச்சையிலும், கிசு கிசுவிலும் சிக்கிக் கொள்ளாமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி ஒன்றினால் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். அதுவரை அவர் சம்பாதித்து வைத்த பெயர் புகழ் அத்தனையும் அந்த பேட்டிக்கு பின்னர் முற்றிலும் டேமேஜ் ஆகிவிட்டது. சோசியல் மீடியா முழுவதும் சிவகார்த்திகேயனை ரோஸ்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில் பருத்திவீரன் சர்ச்சை, மிக்சாம் புயல், தென் தமிழக மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் என அவ்வப்போது மற்ற பிரச்சனைகள் சோசியல் மீடியா முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தன. இதனால் கொஞ்ச நாள் சிவகார்த்திகேயனை விட்டு வைத்திருந்த ப்ளூ சட்டை மாறன் இப்போது மீண்டும் வாய்க்கு வந்தபடி வறுத்து எடுத்து வருகிறார்.

அதாவது நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடும் துயரில் ஆழ்த்தி இருந்தது. மேலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு ஏராளமான திரைப்படம் அரசியல்வாதிகளும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர். ஆனால் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் எந்த ஒரு நடிகரும் விஜயகாந்துக்கு நேரில் வந்த அஞ்சலி செலுத்தவில்லை.

குறிப்பாக, நடிகர் விஷால், கார்த்தி, சூர்யா ஆகியோர் ஏதேதோ சாக்குப் போக்குகளை சொல்லி வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஆனால் திடீரென நேற்று கோயம்புத்தூரில் உள்ள விஜயகாந்த் சமாதிக்கு வந்து கண்ணீர் வடித்தனர். இவர்கள் அனைவரையும் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நடிகர்களைப் போலவே சிவகார்த்திகேயனும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. ஆனால் தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மட்டும் கலந்து கொண்டார்.

நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, பொங்கல் திருநாளன்று சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரவிக்குமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இதை பார்த்த ப்ளூ சட்டை மாறன், “நமக்கு அழுவற மாதிரி நடிக்கவும் தெரியாது… இந்த ரிப்போர்ட்டர்ஸ் வேற இடம், பொருள் தெரியாம அங்க வச்சி… இமானை பத்தி கேப்பாங்க… வேணாம், படம் ரிலீஸாகி.. பொங்கல் முடியட்டும். பொறுமையா போவோம்” என ட்வீட் போட்டுள்ளார். இமான் மனைவி விவகாரத்தில் இதுவரை முழுமையான விவரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை தொடர்ந்து தாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.