ஏமாற்றிய விஜய்… சப்தமே இல்லாமல் உதவி செய்த லாரன்ஸ்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் கேப்டனாக நீங்கா இடம்பிடித்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கேப்டனின் மறைவுக்கு பின்னர் அவரது மகன்களை வீட்டில் சென்று சந்தித்த ராகவா லாரன்ஸிடம் பிரேமலதாவின் உறவினர் ஒருவர் நீங்க தான் ஷண்முகப் பாண்டியனை பார்த்துக்கனும்னு சொன்னாராம்.

இதனால் ஷண்முகப் பாண்டியனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்த ராகவா லாரன்ஸ், தான் ஷண்முகப் பாண்டியன் நடிக்கும் படத்திலோ, அல்லது இருவரும் இணைந்து நடிக்கும் படி யாரேனும் கதை வைத்திருந்தாலோ தான் நடிக்க தயாராக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் அவர்களின் சமாதிக்கு சென்றேன். அங்கிருந்து அவரது வீட்டுக்கும் சென்றோம். அப்போது பேசிக் கொண்டிருந்தபோது, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனை காட்டி, ‘தம்பி ஹீரோவாக நடிக்கிறான்.

நீங்கள்தான் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று விஜயகாந்தின் சகோதரி என்னிடம் சொன்னார். அந்த வார்த்தை என் மனதை ஒரு மாதிரி செய்துவிட்டது. விஜயகாந்த் எத்தனையோ நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளார். நிறைய கெஸ்ட் ரோல் செய்துள்ளார். எனவே அவ்வளவு உதவி செய்த மனிதரின் குடும்பத்துக்கு நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. சண்முகபாண்டியன் படம் ரிலீசாகும்போது அந்த படத்துக்கு ஒரு நல்ல ஓபனிங் கொடுக்க வேண்டும்.

அதனை பிரபலப்படுத்த வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யலாம் என்று இருக்கிறேன். அதுமட்டுமின்றி, படக்குழு ஒப்புக் கொண்டால், அந்த படத்தில் நானும் ஒரு கேமியோ ரோல் – அது சண்டைக்காட்சியோ, பாடலோ – செய்யலாம் என்று இருக்கிறேன். சண்முகபாண்டியனும் நானும் சேர்ந்து நடிப்பது போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும் அவருடன் இணைந்து நடிக்கிறேன். அரசியலில் இருக்கும் விஜய பிரபாகரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்” இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றியவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் ஆரம்ப காலகட்டத்தில் அதிக பட வாய்ப்புகளை பெற்று தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் இடையில் ஒரு பிரேக் ஏற்பட்டது. அவரது இரண்டாவது இன்னிங்ஸில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் அவருக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தற்போது சொன்னபடியே அதை செய்தும் காட்டி இருக்கிறார் லாரன்ஸ். அதன்படி ஷண்முகப் பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படைத் தலைவன் என்கிற திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் லாரன்ஸ். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் சமயத்திலும் புரமோஷனுக்காக உதவவும் முடிவெடுத்து இருக்கிறாராம். லாரன்ஸின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சண்முக பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக விஜயகாந்த் மறைந்தார். அந்த துயர சம்பவத்தில் இருந்து விஜயகாந்த் குடும்பம் இயல்பு நிலைக்கு வரும் நிலையில், சண்முக பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்போது சண்முக பாண்டியனுடன் ராகவா லாரன்ஸூம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.