விஜய்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு.. விஜய்க்கு ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, வாரிசு படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்து இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் இந்த படம் மெகா சீரியல் போல் உள்ளது என்கின்ற விமர்சனத்தினால் படம் வெளியான அடுத்த நாளே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் குறைய தொடங்கியது. ஆனாலும் கூட சீரியல் போல் இருக்கின்றது என்கின்ற விமர்சனத்தினால், சீரியல் அடிமையாய் உள்ள பெண்களின் கூட்டம் திரையரங்குகளில் படையெடுக்க ஆரம்பித்ததை தொடர்ந்து, இந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொண்டது.

வாரிசு படம் வெளியாகி அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழ்நாட்டில் சக்சஸ் பாட்டி கொண்டாடினார் விஜய். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வாரிசு படம் வெளியாகி அடுத்த மூன்று நாட்கள் கழித்து ஆந்திராவில் வெளியானது. இந்த படம் தெலுங்கு சாயல் கொண்ட படம் என்பதாலும். மேலும் தயாரிப்பாளரும் இயக்குனரும் தெலுங்கு சினிமா துறையை சார்ந்தவர்கள் என்பதாலும், தெலுங்கு சினிமாவில் படம் வெளியாகி மூன்று நாட்களில் சுமார் 50 கோடி ரூபாய் குறைந்தது வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்று நாட்களில் வெறும் எட்டு கோடி மட்டுமே வாரிசு படம் வசூலை பெற்றது, ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் வந்த பல படங்களின் சாயல் தான் இது என்கின்ற விமர்சனத்துடன் வாரிசு படம் தெலுங்கு ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. சமீபத்தில் ஹைதராபாத் சென்ற நடிகர் விஜய் அங்கே தெலுங்கு சினிமாவில் வாரிசு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது என்று சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடினார்.

னால் அங்கே தெலுங்கு ரசிகர்கள் விஜய் கொண்டாடிய சக்சஸ் பார்ட்டியை மிகக் கடுமையாக ட்ரோல் செய்து கிண்டல் செய்து வருகிறார்கள். மூன்று நாட்களில் 8 கோடி வசூல் செய்த ஒரு படத்திற்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடும் கூட்டம் இந்த உலகத்திலேயே இவர் தான் என்று தெலுங்கு ரசிகர்கள் விஜயை கிண்டல் செய்து வருவது விஜய்க்கு ஆந்திராவில் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.