விஜயை விட்டு சங்கீதா பிரிவதற்கு இது தான் காரணம்… வைரங்களை பரிசாக கொடுத்து திரிஷாவை அசத்திய விஜய்…

0
Follow on Google News

விஜய் – த்ரிஷா இருவரும், கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து வந்த போது இருவருக்கும் இடையில் தொடர்ந்து கிசு கிசு செய்திகள் வெளியான நிலையில், குருவி படத்தின் வெளிநாடு படப்பிடிப்பின் போது விஜய் – திரிஷா இருவரும் பற்றி கிசு கிசு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விஜய் வீட்டில் அவருக்கும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கு இடையில் பிரச்சனை என்று கூட அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் பின்பு த்ரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டதின் காரணமாக, திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை இதுவரை விஜய் தவிர்த்தின் காரணமாக கடந்த சில வருடங்களாக விஜய் – திரிஷா ஜோடி இனைந்து நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

மேலும் லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த திரிஷா, விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் வழங்கப்ட்டதும், இப்படி திரிஷாவுக்கு சம்பளம் அள்ளி கொடுத்ததில் பின்னணியில் விஜய் இருந்ததாகவும் தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு நார்வே நாட்டில் திரிஷா – விஜய் இருவரும் ஒன்றாக சுற்றி வந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

திரிஷா இருக்கும் நார்வே நாட்டில் விஜய்க்கு என்ன வேலை என்றும், அதே நேரத்தில் தற்பொழுது நார்வேயில் திரிஷாவுக்கு ஏதும் படப்பிடிப்பும் இல்லை, அப்படி இருக்கையில் ஒரே நாட்டில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக சுற்றி வந்தது விஜய் – திரிஷா இருவருக்கும் இடையிலான கிசு கிசு மேலும் அனல் பறந்தது. சமீப காலமாக விஜய் அவரது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்.

விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சங்கீதா கணவர் விஜயை விட்டு பிரிந்து லண்டனில் இருக்கும் அவருடைய தந்தை வீட்டில் வாழ்ந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், கணவர் விஜய்யை விட்டு பிரிந்து சங்கீதா லண்டனில் தந்தை வீட்டில் இருப்பதற்கு காரணம் நடிகை திரிஷா உடன் விஜய் நெருக்கமாக இருப்பது தான் என சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது திரிஷா – விஜய் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகி உச்சக்கட்ட பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. இதற்கு முன்பு நடிகை திரிஷா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போது, கணக்கில் வராத பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றி, அந்த நகை மற்றும் பணம் குறித்து இதெல்லாம் எப்படி வந்தது என விசாரித்துள்ளனர்.

அதில் குறிப்பாக திரிஷா வீட்டில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸை கைப்பற்றிய வருமானவரித்துரையினர், இந்த வைர நெக்லஸ் குறித்து கணக்கு கேட்டுள்ளார்கள், அதற்கு தனக்கு பரிசாக வந்த பொருள் என திரிஷா தெரிவிக்க, யார் இதை பரிசாக குடுத்தது என வருமான வரித்துறையினர் கேட்க, நடிகர் விஜய் தனக்கு பரிசாக இந்த வைர நெக்லஸை கொடுத்ததாக திரிஷா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றி பேசியது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.