விஜய்க்கு நேர்மாறாக விஜய் மகன்…. இதுல விஜய் ஊருக்கு உபதேசம் வந்துவிட்டார்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு திவ்ய சாஷா என்ற மகளும், ஜேசன் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர். தனது மகன் குறித்து பல நேர்காணல்களில் விஜய் பேசியிருக்கிறார். கடந்த ஆண்டு பீஸ்ட் படத்தின் ப்ரமோஷனின் போது நடிகர் விஜய்யிடம் ஜேசன் சஞ்சய் எப்போது சினிமாவுக்கு வருவார் என இயக்குனர் நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஜய் தனது மகன் விரைவில் வர வேண்டும் என்று தான் நானும் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருப்பார். அதோடு நடிகராக அறிமுகமாக போகிறாரா இல்ல இயக்குனராக அறிமுகமாக போகிறாரா என்பது தெரியவில்லை என விஜய் கூறியிருப்பார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

இதை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜேசன் சஞ்சய் விஜய் டொரொன்டொ திரைப்பட பள்ளியில் திரைப்பட தயாரிப்பில் டிப்ளமோ படிப்பும், லண்டனில் திரைப்பட இயக்கத்தில் பிஏ படிப்பும் முடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. சில குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தமிழில் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தங்களது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றி படங்களை தயாரித்துள்ளது. அவற்றில் பெரிய பட்ஜெட் படங்கள் மூலம் பிரம்மாண்டமான படைப்புகளை பார்வையாளர்களுக்கு அளித்துள்ளது. தங்களது ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரும் பல்வேறு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாக லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் வலம் வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் விஜய்யின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கும் படத்தை தயாரிப்பதில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களையும் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்களில் சஞ்சய் ஒப்பந்த படிவத்தை கையெழுத்திடும் மேஜையில் கோகோ கோலா பாட்டில் இடம் பெற்று இருக்கும். இதனால் சஞ்சய் விஜய் கோகோ கோலா நிறுவனத்தை புரொமோட் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜய் 2014ஆம் ஆண்டு அவர் நடித்த கத்தி படத்தில் கொகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசி தெறிக்க விட்டார்.

தாமிரபரணி ஆற்றில் கோலா கம்பெனி ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாகவும் இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் அந்தப் படத்தில் டயலாக் பேசி இருப்பார். ஆனால் சஞ்சய் கோகோ கோலா உடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பலரும் விஜய்க்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதாவது, உங்களது கருத்து எல்லாம் ஊருக்கு தானா உங்கள் பிள்ளைக்கு இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கத்தி படம் வெளியான போது விஜய் கோலா நிறுவனத்துக்கு எதிராக பேசிய வசனத்துக்கு, கடந்த காலங்களில் கோலா விளம்பரத்தில் விஜய் நடித்த காட்சிகளை சுட்டி காட்டி, இவரே கொக்கோ கோலா குடிக்க சொல்லி விளம்பரம் செய்வாராம், இவரே அந்த நிறுவனத்துக்கு எதிராக படத்தில் வசனம் பேசுவாராம் என பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், தற்பொழுது விஜய் மகன் இருக்கும் மேஜையில் கொக்கோகோலா இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.