விஜயுடன் அவருடைய மகன் பேசுவதே கிடையதா.? இருவருக்கும் என்ன பிரட்சனை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. எத்தனையோ இயக்குனர் வாய்ப்பு கேட்டு நல்ல நல்ல கதைகளை கையில் வைத்து கொண்டு, உதவி இயக்குனராக பல படங்கள் பணியாற்றி அனுபவம் உள்ளவர்கள் பலர் வாய்ப்புக்காக கோடம்பாக்கதில் காத்திருக்கையில், விஜய் மகன் ஜாஸன் சஞ்சய்க்கு லைக்கா நிறுவனம் வாய்ப்பு கொடுத்தது விஜய் மகன் என்கின்ற ஒரு காரணத்திற்காகத்தான் என்றும்.

எந்த ஒரு அனுபவம் இல்லாத விஜயின் மகன் ஜோசன் சஞ்சய்க்கு கிடைத்த வாய்ப்பு சினிமாவிலும் நெப்போல்டிசம் உள்ளது என்கின்ற ஒரு விமர்சனம் இருந்தாலும், ஜோசன் சஞ்சய் சினிமா துறை சார்ந்த படிப்புகளை வெளிநாடுகளில் கற்றுத் தேர்ந்த பின்பு, சில குருபடங்களும் இயக்கியுள்ளார், அந்த வகையில் இயக்குனராக தன்னுடைய தகுதியை வளர்த்து கொண்ட பின்பு தான் இந்த வாய்ப்பைப் விஜய் மகன் ஜோசன் சஞ்சய் பெற்றுள்ளார் என்றும்,

ஆகையால் அவருக்கு இயக்குனராகும் முழு தகுதியும் அவருக்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது, அதே நேரத்தில் நடிகர் விஜய்க்கு விருப்பமில்லாமல் அவருக்கு அணுமைதியில்லாமலே லைக்க நிறுவனத்தில் அவருடைய மகன் ஜான்சன் சஞ்சய் இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லைக்கா லண்டனில் இருக்கும் விஜய் மாமனாரும் லைக்கா நிறுவனத்தைச் சார்ந்த லண்டனில் இருக்கும் சுபாஷ்கரனும் நெருங்கிய நண்பர்கள் என்றும்.

அந்த வகையில் ஜோசன் சஞ்சய் இயக்குனராக ஒப்பந்தம் ஆனது முழுக்க முழுக்க அவருடைய தாய் சங்கீதாவின் முயற்சியும், மற்றும் லண்டனில் இருக்கும் சங்கீதாவின் அப்பாவும்தன என்றும், கூறப்படுகிறது. மேலும் ஜான்சன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தில் இயக்குனராக அறிமுகமாக கமிட் ஆன விஷயமே விஜய் கவனத்திற்கு செல்லவில்லை என்றும், காரணம் ஜோசன் சஞ்சைக்கும் அவருடைய தந்தை விஜய்க்கும் இடையில் சமீப காலமாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசுவது கூட கிடையாது என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் விஜய் அவருடைய மகன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதற்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்க வில்லை என்கிற சர்ச்சையும் சினிமா வட்டாரத்தில் வெடித்து வருகிறது. அதாவது விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்கள் பேசாமல் இருந்து வருவது போன்று, விஜய்க்கும் அவருடைய மகன் சஞ்சய்க்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் – சஞ்சய் இருவரும் பேசி கொள்வது இல்லை என கூறப்படுகிது.

இந்நிலையில் விஜய் மாமனார் இலங்கை தமிழர் ஆவார், இவர் லண்டனில் செட்டில் ஆக்கியுள்ளார், அதே போன்று லைக்கா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரண் லண்டனில் செட்டில் ஆன இலங்கை தமிழர், விஜய் மாமனார் லண்டனில் மிக பெரிய தொழில் அதிபர் என்றும், அதே போன்று லண்டனில் பல்வேறு தொழில்களை செய்து வந்த லைக்கா நிறுவனம் சினிமா படம் தயாரிக்க முடிவு செய்து, முதல் முதலில் அவர்கள் தயாரித்த படம் விஜய் நடித்த கத்தி.

ஆனால் லைக்கா நிறுவனம் கத்தி படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்க விஜய்யிடம் கால் சீட் அப்போது பெற்று தந்தது விஜய் மாமனார் தான் என்றும், அதே போன்று லைக்கா தயாரிப்பில் விஜய் மகன் ஜோசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக விஜய் மாமனார் பின்னணியில் இருந்து செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லாமலே அவருடைய மகன் சஞ்சய்க்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது அவருடைய மாமனார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.