இருக்குற இடம் தெரியாம போயிருவீங்க… விஜய்யை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்… ரஜினியிடம் அடங்கி வசிக்கும் விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில், அவருக்கான ஆதரவு வட்டத்தை விட, அவருக்கான எதிர்ப்பு வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, இதற்கு முன்பு சினிமா துறையில் தன்னுடைய சக போட்டியாளரான அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை மட்டுமே பெற்று வந்த விஜய், சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்தை சீண்டி ரஜினிகாந்த்ன் நேரடி கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் தற்பொழுது அஜித் – ரஜினி இரண்டு ரசிகர்களும் ரவுண்டு கட்டி விஜயை வெளுத்து வருகிறார்கள், அதே போன்று விஜய்க்கு சினிமாவில் வாழ்கை கொடுத்த விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாம இருக்கையில், ஒரு முறை கூட விஜய் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரிக்க வில்லை என விஜயகாந்த் ஆதரவாளர்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளார்கள், இப்படி விஜய்க்கு எதிப்பு வட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்.விஜய் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து முக்கிய புள்ளிகளிடம் ஆலோசனை நடத்தி வந்து கொண்டிருகிறார்.

அந்த வகையில் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை இதற்கு முன்பு இரண்டு முறை சந்தித்து தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார், இரண்டு முறையுமே வெளி மாநிலக்களில் ரகசியமாக நடந்தது விஜய் – பிரசாந்த் கிஷோர் ஆலோசனை, அந்த வகையில் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடும் போது பிரசாந்த் கிஷன் விஜய்யின் அரசியல் ஆலோசகராக செயல்படுவார் என்றும், அதற்காக அவருக்கு பெரும் தொகையும் பேசப்பட்டுள்ளது, விஜய்யும் அந்த தொகையை கொடுத்து பிரசாந்த் கிஷோரை தன்னுடைய அரசியல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து அவ்வ போது விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பல டிப்ஸ்களை கொடுத்து வருகிறார், அந்த வகையில் இம்முறை விஜய்க்கு பிரசாந்த் கிஷோரிடம் இருந்து சென்ற எச்சரிக்கை தான் விஜய்யை கலக்கம் அடைய செய்துள்ளது. அரசியல் ரீதியாக இனிவரும் கலங்களில் அரசியல் காட்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் விஜய், தறபோதே தேவையின்றி அவரை சுத்தி எதிரிகள் அதிகரிப்பது விஜய் அரசியலுக்கு மிக பெரிய வீழ்ச்சியாக இருக்கும். அதற்கு முக்கிய காரணமே விஜய் தான் என்பதை நேரடியாகவே விஜயின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

அதாவது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஆரம்பத்திலே புகைச்சல் ஏற்பட்ட போது, தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி தான் விஜய் பெருந்தன்மையுடன் பேசி இருந்தால், அது ரஜினியை கொண்டாடும் ஒரு கூட்டம் விஜயை கொண்டாடி இருக்கும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்து இருந்தால் விஜயகாந்த் ஆதரவு வட்டம் விஜயை கொண்டாடி இருக்கும், குறிப்பாக அரசியலில் குதிக்க இருக்கும் விஜய்,

இதுவரை தனக்கு எதிராக இருந்த அஜித் ரசிகர்களை ஆதரவாளராக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும், அப்படி அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் துணையுடன் அரசியலில் இறங்கினால் மட்டுமே அரசியலில் விஜய் தாக்கு பிடிக்க முடியும், அல்லது எதிப்பு வட்டம் அதிகரிக்க அதிகரிக்க, விஜய் அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார் என விஜய்க்கு நேரடியாகவே அட்வைஸ் செய்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

இதன் பின்பு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை படி, லியோ வெற்றி விழாவை ஏற்பாடு செய்து அதில் பேசிய விஜய், ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தது மட்டுமில்லாமல், தல அஜித், புரட்சி கலைஞர் கேப்டன், என புகழ்ந்து அஜித் ரசிகர்கள், விஜயகாந்த் ஆதரவர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.