விஜய்யும் அந்த மாதிரி ஆள் தானா.? அவருடன் ஜோடியாக நடித்த ஜோதிகா பேசிய பேச்சு சர்ச்சையாக வெடித்தது…

0
Follow on Google News

பொதுவாகவே இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு அவலங்கள் நடந்தால் பொங்கி எழுந்து முதல் ஆளாக குரல் கொடுக்கின்றவர்கள் சினிமா நட்சத்திரங்கள். அதே நேரத்தில் நீங்கள் பெரிய ஒழுக்கமா? பெருசா பேச வந்துடீங்க என குரல் கொடுக்கும் சினிமா துறையினருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தவதும் உண்டு. இந்நிலையில் சமீபகாலமாக சினிமா துறையில் இருப்பவர்கள் மீது தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது.

பொதுவாகவே சினிமா துறையில் ஒழுக்கம் நிறைந்த ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சிவகுமார் தான். அவரை தான் உதாரணமாக இன்று வரை ஒரு குறிப்பிட்டு ஒரு நடிகர் என்றால் சிவகுமார் மாதிரி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் சிவக்குமார் போன்ற ஒரு ஒழுக்கமான நடிகர்கள் இவர்தான் என யாரையும் குறிப்பிட்டு சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என்கிற வருத்தம் பலருக்கு உண்டு.

அப்படி இவர் மிகவும் ஒழுக்கமான நடிகர் என யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத காரணத்திற்கு பல நடிகர்களின் உண்மை முகம் வெளியில் தெரிவதில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் பற்றி இமான் கொடுத்த ஒரு பேட்டியின் மூலம் சிவகார்த்திகேயனின் உண்மை முகம் தோலுரிக்க பட்டது. இதன் பின்பு சிவகார்த்திகேயனின் இமேஜ் மிகப்பெரிய அளவில் டேமேஜ் ஆனது.

சிவகார்த்திகேயன் விவகாரம் தொடங்கி சினிமா துறையில் எல்லா நடிகரும் இப்படித்தானா.? என்கின்ற கண்ணோட்டம் மக்கள் பார்வையில் விழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு தற்பொழுது திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா.

குறிப்பாக தமிழ் சினிமாவில் மாதவன், சூர்யா, அஜித் ஆகிய இவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டு, இந்த மூன்று நடிகர்களுடன் மட்டுமே நடிக்கும் பொழுது எனக்கு கம்ஃபோர்ட்டபிளாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜோதிகா பல முன்னணி நடிகர்களுடன் பல படங்கள் நடித்தவர், அந்த வகையில் சூர்யா, மாதவன், அஜித் இந்த மூன்று நடிகர்களுடன் மட்டும் நடிக்கும் போது தனக்கு கம்ஃபோர்ட்டபிளாக இருக்கும் என்று ஜோதிகா தெரிவித்துள்ளதால்.

ஜோதிகா குறிப்பிட்டு சொன்ன அஜித், சூர்யா, மாதவன் தவிர்த்து மற்ற நடிகர்களுடன் நடிக்கும் போது, எதாவது தவறான பிரச்சனைகளை சந்தித்தாரா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நடிகர் விஜய் உடன் குஷி, திருமலை, என ஜோடி சேர்ந்து நடித்த ஜோதிகா, அவருடன் நடிக்கும் போது கம்ஃபோர்ட்டபிளாக இல்லை என உணர்கிறாரா.? அப்படியானால் விஜய் உடன் நடிக்கும் போது ஏதாவது பிரச்ச்னை எதிர் கொண்டாரா ஜோதிகா என விமர்சனம் எழுந்துள்ளது.?

இந்நிலையில் சூர்யா, மாதவன், அஜித் ஆகிய மூவருடன் மட்டும் நடிக்கும் போது எனக்கு கம்ஃபோர்ட்டபிளாக இருந்தது என தெரிவித்த ஜோதிகா. எதற்காக விஜய் பேரையும் அந்த லிஸ்டில் தெரிவிக்கையில், அந்த வகையில் ஜோதிகா குறிப்பிட்ட அந்த மூன்று நடிகர்கள் தவிர விஜய் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் ஜோதிகாவிடம் அத்துமீறி ஏதோ ஒரு சூழலில் நடந்து கொண்டார்களா என்கின்ற என ஜோதிகாவின் பேச்சை கேட்டவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் ஜோதிகா தன்னுடன் நடித்த நடிகர்களில் கம்ஃபோர்ட்டபிளாக இருக்க கூடியவர்கள் என விஜய் பெயரை தவித்ததால், விஜய்யும் அந்த விஷயத்தில் மற்ற நடிகர் போல் தானா.? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிட தக்கது..