மகன் அடிக்கும் லூட்டி …. தக்க பதிலடி கொடுத்த உதயநிதி – கிருத்திகா தம்பதியினர்…

0
Follow on Google News

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், கிருத்திகா 12ம் வகுப்பு படிக்கும் போது உதயநிதி கல்லூரி முதலாம் ஆண்டு படித்துள்ளார், அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்த பின்பு இருவரும் இரண்டு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு மதமாக இருந்தாலும் கூட மதங்களைக் கடந்தது காதல் என்பதை நிரூபிக்கும் வகையில் இருவரும் தங்களில் காதலில் உறுதியாக இருந்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.இந்த தம்பதியினருக்கு இன்பநிதி என்கின்ற ஒரு ஆண் பையனும் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கால்பந்து விளையாட்டு பயிற்சி எடுத்து ஒரு சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க சென்ற இன்பநிதி அவருடைய பெண் தோழியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் இதற்கு முன்பு வைரலாகி வந்தது. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து இன்ப நிதி அவருடைய பெண் தோழியுடன் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் வந்தனர்.

பொதுவாக அரசியலில் இருக்கக்கூடிய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கூட விமர்சனம் செய்யக்கூடாது என்கின்ற ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அதை தாண்டி ஒரு அரசியல் தலைவரின் மகன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய ஒரு இளைஞன் சக பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கேலி கிண்டல் செய்து வந்தனர்.

அப்போது இந்த சம்பவத்தை சம்பவங்களையும் குறிப்பிடாமல் இன்பநிதியின் தாய் கிருத்திகா அவருடைய சமூக வலைதள பக்கத்தில், நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம் , இயற்கை அதன் முழு மேன்மையை புரிந்து கொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று, என பதிவிட்டு தன்னுடைய மகனின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும், தன்னுடைய மகனை விமர்சனம் செய்தவர்கள் தலைதெறித்து ஓடுவது போன்ற சரியான பதிலடி கொடுத்து ஒரு சிறந்த தாய்க்கு முன்னுதரமாக திகழ்ந்துள்ளது பலரின் பாராட்டுகளை அப்போது பெற்றார் கிருத்திகா.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அப்பா எனக்கு நண்பர் போன்றவர். அப்பா, அம்மா இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும்போது, அப்பா நான் உங்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னால் எல்லாம் முடிஞ்சுச்சு. அதனால் அப்பா தனியாக இருந்தபோது அவரிடம் என் காதலை சொன்னேன்.

அவரோ, அம்மாவிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். அதனால் எந்த பிரச்சனையும் வரவில்லை என தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேலும் நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். கிருத்திகா 12ம் வகுப்பு படித்தார். அப்பொழுது தான் எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 7, 8 ஆண்டுகள் காதலித்தோம். அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் காதல் திருமணம் செய்யாவிட்டால் ஒரு மாதிரி பார்த்தாங்க.

பல காதல் திருமணம் நடந்தது. காதலிக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்பாங்க,எங்கள் வீட்டில் காதல் திருமணம் எல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. என் பையன் இப்போ என்னைவிட பெரிய லூட்டிலாம் அடிச்சிட்டு இருக்கான். இருந்தாலும் பார்த்து, உன் வயசுக்கு தகுந்த மாதிரி பண்ணுப்பா என அறிவுரை வழங்கினேன் என வெளிப்படையாக உதயநிதி ஸ்டாலின் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்பநிதி தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்து வந்தவர்களுக்கு தரமான பதிலடியை கொடுத்து சிறந்த தாய் – தந்தை என நிரூபித்துள்ள உதயநிதி – கிருத்திகா தம்பதியினரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.