வாடிவாசல் ஒரிஜினல் காளை யெல்லாம் கிடையாதாம்.. இதற்கு எதற்கு சூர்யா உனக்கு பில்டப்..

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் தானு தயாரிப்பில் வாடிவாசல் என்கின்ற படத்தில் கமிட்டானார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தின் போட்டோ சூட் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று, படத்தின் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது.

இந்த படம் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதை என்பதால் ஒரு ஜல்லிக்கட்டு காளை உடன் நடிகர் சூர்யா சகஜமாக பழகுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படமும் வெளியானது. ஆனால் வாடிவாசல் படத்தின் அடுத்த கட்ட பணிகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை அதற்குள் அடுத்து சிறுத்தை சூர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி பிஸியானார் சூர்யா.

அதே போன்று தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம் ஒன்றில் வெற்றிமாறன் கமிட்டானார். இதனால் வாடிவாசல் திரைக்கு வருமா என்கின்ற சந்தேகம் பலருக்கு இருந்த நிலையில், இந்த படம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியானது, இதற்கு முக்கிய காரணம் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியான போதே சுமார் 25 கோடி ரூபாய்க்கு ஹிந்தி டப்பிங் வியாபாரத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர் தானு முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பல இடங்களில் வியாபார ரீதியாக வாடிவாசல் படத்தை பேசி முடிக்கப்பட்ட நிலையில் இந்த படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும். வாடிவாசல் படம் நிச்சயம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது லண்டனில் வாடிவாசல் படத்திற்கான வேலையில் ரொம்ப பிசியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதால் எதற்காக வெற்றிமாறன் லண்டன் சென்று இந்த படத்திற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார், லண்டனுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், வாடிவாசல் படத்தில் பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் காட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை சம்பந்தமான பல காட்சிகள் சிஜி ஒர்க் மூலம் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சி ஜி ஒர்க்கை லண்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் சிஜி ஒர்க் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அது எப்படி வந்துள்ளது என்று பார்ப்பதற்காக தான் லண்டன் சென்றுள்ளார் வெற்றிமாறன். அந்த வகையில் பெரும்பாலும் வாடிவாசல் படத்தில் உண்மையான காளை மாடு பயன்படுத்தவில்லை என்றும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே,

அதாவது நடிகர் சூர்யா காளையை பிடித்து நடந்து வருவது போன்று, அந்த காளை உடன் எதார்த்தமாக இருக்கும் போன்ற காட்சிகள் மட்டுமே உண்மையான காளை பயன்படுத்தப்படும் என்றும் மற்றபடி பெரும்பாலும் சிஜி ஒர்க் தான் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளையுடன் பழகுகிறார். மேலும் ஜல்லிக்கட்டுக்கான பயிற்சி மேற்கொள்கிறார் என்று பல செய்திகள் வந்த நிலையில்.

தற்போது பெரும்பாலும் சிஜி ஒர்க் என்கிற உண்மை நிலவரம் தெரிந்த பின்பு எதற்கு சூர்யா இந்த ஓவர் பில்டப் உங்களுக்கு என்கின்ற ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் தயாரிப்பாளர் தானும் இந்த படத்தில் காளையை சூர்யாவுடன் பழகுவதற்கு பயிற்சி கொடுப்பவர்களுக்கு மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று போற போக்கில் அடித்து விட்டது, பெரும்பாலும் சி ஜி ஒர்க் நடக்கும் படத்தில் இதெல்லாம் நம்புற மாதிரியாக இருக்கு என்கின்ற ஒரு கேலி கிண்டல் விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.