தேடி வந்த சூர்யா …உதறி தள்ளிய ஹரி… அவமானத்தை மறக்க முடியுமா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனர் என்கின்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் இயக்குனர் ஹரி, இவர் இயக்கத்தில் ஐந்து படங்கள் வரை நடிகர் சூர்யா நடித்துள்ளார். இதனால் நடிகர் சூர்யாவுக்கும் மற்றும் இயக்குனர் ஹரிக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது, ஹரி இயக்கத்தில் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக சூர்யா உருவெடுக்க இயக்குனர் ஹரி ஒரு முக்கிய காரணம்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் அதனை தொடர்ந்து சிங்கம் 2 என மிகப்பெரிய ஹிட் படத்தை தொடர்ந்து மிக பெரிய எதிர்பார்ப்பில் சிங்கம் 3 வெளியானது, ஆனால் சிங்கம் 3 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, இதன் பின்பு ஹரி இயக்கத்தில் சாமி 2 படம் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியானது அந்தப் படமும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹரி இயக்கத்தில் தோல்வியை சந்தித்ததும் சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்தார் ஹரி.

தன்னை மீண்டும் சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ள ஒரு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஹரி, தன்னுடைய இயக்கத்தில் அதிக படம் நடித்தவர் சூர்யா மேலும் தன்னுடன் மிக நெருங்கிய நட்பில் இருப்பதால், அடுத்த படம் சூர்யாவுக்காக கதை தயார் செய்யப்பட்டு அந்த கதையை சூர்யாவிடம் தெரிவித்து சூர்யாவிடம் சம்பந்தமும் பெற்றார் ஹரி, படத்துக்கு அருவா என பெயரிடப்பட்டது.

இந்த படத்தின் முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, படத்தின் படப்பிடிப்புக்கான அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், ஹரியின் தொடர் தோல்வியை மனதில் வைத்து கொண்டு அருவா படம் பாதியிலே வெளியேறினார் சூர்யா. இதற்கு சூர்யா தரப்பில் இருந்து சொன்ன காரணம் ஹரி மிகப்பெரிய சரிவில் இருக்கிறார். அவருடைய படத்தில் தற்போது நடிப்பது சரியாக இருக்காது என்பதாக கூறப்படுகிறது.

இதனால் டென்ஷனான ஹரி அருவா படத்தை யானை என பெயர் மாற்றி, சூர்யா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தன்னுடைய மச்சான் அருண் விஜயை நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் ஏன் சூர்யா நடிக்கவில்லை என அவர் வருத்தப்பட வேண்டும் என்றும், நடிகரை வைத்து நான் வெற்றி பெற்றவன் கிடையாது. என்னுடைய கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும் என்கிற சவாலுடன் யானை படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் ஹரி.

யானை படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக நுட்பமாக உருவாக்கினார் ஹரி, படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் யானை படம் வெற்றிக்குப் பின்பு ஹரியை தொடர்பு கொண்டு மீண்டும் நம்ம ஒரு படம் பண்ணலாம் சார், ஒரு கதை ரெடி பண்ணுங்க என சூர்யா கேட்டுள்ளார். அதற்கு ஓகே சொன்ன ஹரி, ஆனால் பழசை மறக்காமல் தன்னை உதாசீனப்படுத்திய சூர்யாவை வைத்து மீண்டும் படம் பண்ணமாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதால், சூர்யாவை தள்ளிவிட்டார் ஹரி என கூறப்படுகிறது.

ஒரே ஒரு நோட்டீஸ்..மொத்த இமேஜும் டேமேஜ்… அந்தர் பல்டி அடித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்..!