படம் வெளியானால் அட்ட பிளாப்..! அச்சத்தில் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக சூர்யா அறிவிப்பு.!

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருந்த சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, கடந்த எட்டு வருடத்தில் நடிகர் சூர்யா நடித்த எட்டு படங்களும் தோல்வியை தழுவியுள்ளது, இந்நிலையில் கடந்த எட்டு வருடமாக தனது ரசிகர்களுக்கு ஒரு வெற்றி படம் கொடுக்க கடுமையாக போராடி வருகிறார் சூர்யா, இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் சூரரை போற்று படத்தை வெற்றி பெற வைக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார் சூர்யா.

சூரரை போற்று தோல்வி அடைந்தால் இது அவருக்கு தொடர்ந்து ஒன்பதாவது தோல்வி படமாகும்,இந்நிலையில் அடுத்தடுத்து வரவிருக்கும் அவருடை படத்திற்கு வரவேற்பு இல்லாமல் சென்று விடும், ஏற்கனவே நடிகர் சூர்யாவை வைத்து அருவா என்கிற படத்தை இயக்க இருந்த வெற்றி பட இயக்குனர் ஹரி திடீரென சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜயை தனது படத்தில் கதாநாயகனாக மாற்றியுள்ளார், இதற்கு காரணம் சூர்யாவின் தொடர் தோல்வி தான் என கூறபடுகிறது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் ஓடிடி அமேசானில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்து அக்டோபர் 30ல் ரிலீஸ் என அறிவித்தார் சூர்யா. சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சூர்யா தன் முடிவை மாற்றவில்லை. ஆனால் தற்போது சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு என தெரிவித்து ரசிகர்களுக்கு விளக்க கடிதம் கொடுத்துள்ளார் சூர்யா.

இதன் பின்னணி குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் சூரரை போற்று படம் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை நடிகர் சூர்யா கையாண்டாலும், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றும், இந்நிலையில் சூரரை போற்று படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால்,இப்படம் வெற்றி பெரும் என்பதில் நடிகர் சூர்யாவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது, இந்நிலையில் தற்போது இந்த படத்தை வெளியிட்டால் மேலும் தனது இமேஜ் சரியும் என்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளார் சூர்யா என கூறப்படுகிறது.