போதும் சாமி ஆளை விடு…. பாலா முகத்திற்கு நேராக சூர்யா என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பில் நடித்து வரும் படம் வணங்கான். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில், பாலா – சூர்யா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சகட்டம் அடைந்ததை தொடர்ந்து, இருவருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதனால் வணங்கான் படத்தின் படப்பிடிபில் இருந்து பாதியிலே வெளியேறி சென்னை திரும்பினார் சூர்யா. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருந்த நிலையில், சூர்யா- பாலா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சமூக தீர்வு காண நடந்த பேச்சுவார்த்தை கடும் இழுபறிக்கு பின்பு சுமூகமா முடிந்தது, இதனால் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாமதமானது.

இதனை தொடர்ந்து கோவாவுக்கு பதில் பாண்டிச்சேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த பட குழுவினர் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் தற்பொழுது வரை எடுக்கப்பட்டுள்ள வணங்கான் படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் திணறி வருகிறார் பாலா. இதனால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இருந்தும் தொடர்ந்து பாலா பல கதை ஆசிரியர்களிடம் இந்த கதை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இருந்தும் இந்த படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு பாலாவால் நகர்த்த முடியவில்லை. இதனால் காத்திருந்து, காத்திருந்து, நாட்களை வீணடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்த நடிகர் சூர்யா. இனி பாலாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை.முல்லில் விழுந்த சேலை போன்று பாலாவின் குணம் அறிந்தே இந்த படத்தில் கமிட்டாகிவிட்டோம், அதனால் இந்த படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும்.

படம் பாதியிலே கைவிடப்பட்டால், தயாரிப்பாளர் என்கிற முறையில் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்த சூர்யா, நேரடியாக பாலாவிடம் சென்று சமூகமாக பேசி உள்ளார். வணங்கான் படத்தின் கதையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான கதையை தயார் செய்ய அவசரப்பட வேண்டாம். கூடுதலாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் இந்த இடைப்பட்ட காலத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கமிட்டாகியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என பாலாவிடம் சுமூகமாக தனது விருப்பத்தை தெரிவித்துவிட்டு. தற்பொழுது சிறுத்தை சிவா படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புசெழியனிடம் ஐடி ரெய்டு….நேக்கா தப்பித்த தனுஷ் …. ரஜினிகாந்த் சிக்கியது எப்படி தெரியுமா.?