இஷ்டம்னா நடிகலாம்…இல்லனா விலகிக் கொள்.. சூர்யா மீது கோபத்தை வெளிப்படுத்திய வெற்றிமாறன்…

0
Follow on Google News

வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு சூர்யா போட்ட கண்டிஷனை ஏற்க மறுத்த வெற்றிமாறன், சூர்யாவின் முகத்துக்கு நேராக பளிச்சென்று சொன்ன தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் பாலு மஹேந்திராவிடன் உதவி இயக்குனராக பணியாற்றி, 2007இல் நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர்.

தொடர்ந்து நடிகர் தனுஷ் கூட்டணியில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படம், வெற்றிமாறனுக்கு இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. விசாரணை, வடசென்னை, அசுரன் மற்றும் விடுதலை போன்ற ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்குக் கொடுத்தார். கடைசியாக நடிகர் சூரியை வைத்து எடுத்த விடுதலை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

எனவே, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் மும்முரமாக வேலை பார்த்து வரும் வெற்றிமாறன், இப்படத்தை முடித்ததும் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுக்க உள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே தனது வடசென்னை படத்தில் இயக்குனர் அமீரை நடிக்க வைத்து மாஸ் காட்டிய வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்திலும் அமீரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் அமீருக்கும் சூர்யா குடும்பத்தினருக்கும் இடையே பருத்திவீரன் படம் தயாரிப்பு தொடர்பான பிரச்சனை ஓடிக் கொண்டிருப்பதால், சூர்யாவின் படத்தில் அமீரை நடிக்க வைப்பதற்கு சூர்யா சம்மதிப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான சூழலில், நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் அமீரை நடிக்க விடக்கூடாது என்பதற்காக வெற்றிமாறனிடம் கண்டிஷன் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதாவது, அமீரின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்குமாறு சூர்யா இயக்குனர் வெற்றிமாறனிடம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன்,”என்னுடைய திரைப்படத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் சொல்ல வேண்டும். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நடிக்கலாம், இல்லையெனில் தாராளமாக நீங்கள் விலகிக் கொள்ளலாம்” இன்று சூர்யாவின் முகத்தில் அடித்த மாதிரி பட்டென்று கூறி விட்டாராம்.

சமீபத்தில் இயக்குனர் அமீர் நடித்திருந்த மாய வலை படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிட்டார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், இயக்குனர் அமீர் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ‘வட சென்னை’ ராஜன் கதாபாத்திரம் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது.

கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் குறித்து நான் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் அதைப் பற்றி சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேனோ என்று நினைத்தார். ஆனாலும் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது” என்று அமீர் உடனான நட்பு குறித்து மேடையில் பகிர்ந்திருந்தார் வெற்றிமாறன், அந்த வகையில் சூர்யா குடும்பத்திற்கு – அமீருக்கும் இடையிலான பிரச்சனையில் அமீர் பக்கம் தான் வெற்றிமாறன் இருப்பது அவரது நடைவடிக்கை மூலம் உறுதியாக தெரிகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது .