சூர்யா முகத்தில் கறியை பூசுவரா ஹரி.? சவாலில் இருந்து பின் வாங்கியது ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் முடித்த கையோடு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது, அந்த படத்துக்கு அருவா என பெயரிடப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் ஹரியிடம் சூரரை போற்று படத்தில் நடித்த போதே அடுத்த படத்துக்கான கதை தயார் செய்ய கேட்டு கொண்டுள்ளார்சூர்யா, இதனை தொடர்ந்து அருவா படத்தை சூர்யாவுக்காக தயார் செய்துள்ளார் இயக்குனர் ஹரி,

கதையை கேட்ட சூர்யா அருமையாக இருக்கு விரைவில் இந்த படத்துக்கான அடுத்தகட்ட பணியை தொடங்குவோம் என சூர்யா உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதே போன்று வெற்றிமாறனிடமும் கதை கேட்டுள்ளார் சூர்யா, அந்த படத்துக்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டது, ஆனால் இருவரிடமும் கதையை கேட்டுவிட்டு ஜெய்பீம் படத்துக்கு அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இது இயக்குனர் ஹரிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. பாண்டிராஜ் இயக்கிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த கையோடு, அடுத்தடுத்து ஹரி அல்லாத மற்ற இயக்குனர்களிடம் கமிட்டாகியுள்ளார் சூர்யா, இதனை தொடர்ந்து சூர்யாவுக்காக கதையை தயார் செய்துவிட்டு காத்திருந்த இயக்குனர் ஹரி, முறையான பதில் ஏதும் வராத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்து வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்க முடிவு செய்த ஹரியிடம் சினிமா துறையை சேர்ந்த ஒருவர்,

கோவித்து கொள்ளாதீர்கள், நீங்க எடுத்த கடைசி படம் சாமி இரண்டாம் பாகம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து உங்கள் இயக்கத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டுகிறார் என தெரிவிக்க, இதை கேட்டு கடுப்பான இயக்குனர் ஹரி, அவர் யாருய்யா எனக்கு வாய்ப்பு கொடுக்க, நான் எடுத்த ஒரு படம் தோல்வி, அவர் நடித்த 9 படம் தொடர் தோல்வி, ஏன் அவரை வைத்து இயக்குனர்கள் படம் எடுக்க முன்வர வில்லையா என தெரிவித்தவர்.

உடனே தனது மைத்துனர் நடிகர் அருண் விஜய்யை வைத்து தனது புதிய படத்தை தொடங்கினார் இயக்குனர் ஹரி. கிராமத்துக்கு கதையான இந்த படத்தின் ஒவ்வொரு கட்சியையும் மக்கள் ரசிக்கும்படி எடுத்து வருகிறார் இயக்குனர் ஹரி. இந்த படத்தின் படப்பிடிப்பின் உணவு இடைவேளையின் போது தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய இயக்குனர் ஹரி, நான் இயக்கி சூர்யா நடித்த அணைத்து படங்களிலும் சூர்யாவை தவிர மற்ற யார் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால் நன்றி உணர்வு இல்லாமல் என்னை காக்க வைத்து ஏமாற்றிய நடிகர் சூர்யா முகத்தில் கறியை பூசியது போன்று தற்போது நான் இயக்கும் புதிய படத்தை, சூர்யா நடிப்பில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியிட்டு மிக பெரிய வெற்றியை பெறுவேன் என ஹரி கூறியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தனது சவாலில் இருந்து பின் வாங்கியுள்ளார் ஹரி என தகவல் வெளியாகி உள்ள நிலையில். எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் அன்று ஹரி படம் வெளியாகவில்லை என கூறப்படுவது குறிப்பிடதக்கது.