நடிகர் சூர்யா ஒரு கோடி நன்கொடை பணம்.. எங்கிருந்து வந்தது தெரியுமா.? இதிலும் பித்தலாட்டமா.? வெளியானது பரப்பரப்பு தகவல்..

0
Follow on Google News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யா மற்றும் அவர்களின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க பொறுப்பாளர்கள் இந்த உதவியைப் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு ஜெய் பீம் படம் வெளியாவது முந்தையை தினம் நடைபெற்றது.

இந்நிலையில் இருளர் மாணவர்களின் கல்விக்காக முதல்வரிடம் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார் சூர்யா. ஜெய் பீம் படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது. இருளர் பழங்குடியினர் பிரச்சனையை பேசிய படம் என்பதால், அதில் கிடைத்த தொகையில் ஒரு பகுதியான ஒரு கோடியை அம்மக்களின் கல்விக்காக அளித்துள்ள சூர்யாவின் செயல் இது என சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை விளம்பரம் செய்யும் நோக்கில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சூர்யா வழங்கிய நன்கொடை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது, இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர். செல்வகுமார் தெரிவித்துள்ளதாவது. இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் ‘திராவிடத்தனம்’ பண்ணியிருக்கார் நடிகர் சூர்யா, அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல என்று தெரிவித்த செல்வகுமார்.

மேலும், சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வளர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார். காசோலையில் இருக்கும் ‘PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST’ என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை. இது புதிதாக தொடங்கபட்டதா ? இன்னும் பதிவு செய்யபடவில்லையா ? அதன் நிர்வாக்கிள் யார் யார் ?

போன்ற பல சந்தேகங்கள் எழுகிறது, இதை சூர்யா தெளிவு படுத்த வேண்டும். மேலும், IRULAR என்ற வார்த்தை பெயரில் கொண்ட அறக்கட்டளை இந்தியாவில் எங்கும் இல்லை. அகரம் பவுன்டேசன் நிர்வாகி TJ ஞானவேல் தான் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் என்பது கூடுதல் தகவல். மேலும் TJ ஞானவேல்Studio Green ஞானவேல்ராஜா இருவரும் வேறு வேறு நபர் என செல்வகுமார் தெரிவித்துள்ளார்.