அஜித், விஜய் போன்று தன்னை மாற்றி கொண்ட சூர்யா… என்னென்னா மாற்றங்கள் செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் உடன் ஒப்பிடும்போது நடிகர் சூர்யா அவர்களை விட மிகத் திறமையான நடிகர் என்பது பரவலாக சினிமா துறையினர் மத்தியில் உலாவி வரும் உள்ள கருத்தாகும். அஜித், விஜய் விட அதிகம் விருதுகளை வாங்கி குவித்துள்ள நடிகர் சூர்யா, இந்தியாவில் மிகப்பெரிய விருதான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இருந்தாலும் அஜித், விஜய் இவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்ட நடிகர்கள் வரிசையில் தான் சூர்யா இதுவரை இருந்துள்ளார்.

தற்பொழுது தன்னைத்தானே பரிசோதனை செய்து கொண்ட சூர்யா, அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற செயல்களால் தான் அஜித், விஜய் ஆகியோருக்கு சமமான இடத்தை பிடிக்க முடியவில்லை என்று உணர்ந்து, சமீபகாலமாக பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வரும் நடிகர் சூர்யா, பத்திரிகையாளர்களுடன் தொடர்பையும் துண்டித்துள்ளார்.

மேலும் தற்பொழுது தன்னுடைய தொலைபேசி எண்ணையும் மாற்றி, தனக்கு நெருக்கமான ஒரு சில நபர்களுக்கு மட்டுமே இந்த நம்பரை கொடுத்து, இந்த எக்காரணத்தை கொண்டு இந்த நம்பர் வெளியில் லீக் ஆக வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை அஜித், விஜய் போன்று ஒரு வட்டத்துக்குள் சுருங்கி கொண்டுள்ளார் நடிகர் சூர்யா.

இனிவரும் காலங்களில் சினிமா மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தவிர்த்து அவரை வேறு எங்கும் பார்க்க முடியாதபடி தன்னுடைய நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் சூர்யா, இருந்தும் இந்த நடவடிக்கை அவருக்கு விஜய, அஜித் சமமான இடத்தை தக்க வைக்குமா என்பது எதிர்காலம் தான் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.