சிவகுமார் குடும்பத்தை உடைத்து சூர்யாவுடன் வெளியேறிய ஜோதிகா.. நிலைகுலைந்து போன சிவக்குமார்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்பு ஜோதிகா சினிமாவில் நடிக்க கூடாது குடும்பத்துடன் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என சிவகுமார் போட்ட கண்டிஷனை சூர்யாவும், ஜோதிகாவும் ஏற்று கொண்ட பின்பு தான் இவர்கள் திருமணத்திற்கு சிவகுமார் ஒப்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு சில வருடம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த வந்த ஜோதிகா, இரண்டு குழந்தை பிறந்த பின்பு 36 வயதினிலே படத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார், இது அவருடைய மாமனார் சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என கூறப்பட்டது. இருந்தும் தொடர்ந்து ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் நடித்து வந்தது அவருடைய குடும்பத்தில் மிக பெரிய புகைச்சலை உருவாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்த ஜோதிகா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். மேலும் இனி தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என ஜோதிகா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே கணவன் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்து வந்துள்ளார் ஜோதிகா,

இதனால் பெரும் லாபத்தை சம்பாரித்து வந்த சூர்யா, பெரும்பாலும் சென்னையை விட மும்பையில் தான் குடும்பத்துடன் அதிக நாட்கள் கடந்த ஒரு வருடமாக தங்கி வந்தார். கணவர் சூர்யாவை மும்பையில் முதலீடு செய்ய வைத்ததே, சென்னையில் அவருடைய கூட்டு குடும்பத்தில் இருந்து பிரித்து மும்பைக்கு தனி குடித்தனம் செல்வதற்காக ஜோதிகா போட்ட மாஸ்டர் பிளான் இது என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது

இந்நிலையில் தற்பொழுது சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் சூர்யா. இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்த ஜோதிகா தமிழ் தவிர்த்து பிற மொழி படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு நேரடியாக மும்பை சென்று விடுகிறார் சூர்யா. அதே நேரத்தில் மும்பைக்கு சூர்யா குடும்பத்துடன் குடியேறிய பின்பு, சென்னையில் உள்ள தன்னுடைய தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பத்திலே சினிமா நடிகையை திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்னேன்,

ஆனால் பிடிவாதமாக மூத்த மகன் சூர்யா திருமணம் செய்து கொண்டு, தற்பொழுது கூட்டு குடும்பமாக இருந்த நம் குடும்பத்தை உடைத்து மகனை பிரித்து மும்பைக்கு தனி குடித்தனம் சென்று விட்டார் மருமகள் ஜோதிகா என்று, மிக பெரிய வருத்தத்தில் சிவகுமார் இருந்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.