அண்ணா, தம்பியின் கம்பி கட்டுற கதையை பருக்க பாக்களே… ரெண்டு பேருமே சினிமாவுக்கு இடம் தெரியாம போயிருக்கணும்…

0
Follow on Google News

நடிகர் சூர்யா அவரது தம்பி நடிகர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் சொந்த தயாரிப்பு தான். இந்நிலையில் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம், சுரரை போற்று ஆகிய இரண்டு படங்களுக்கு முன்பு வரை சுமார் 10 படங்கள் தொடர் தோல்வியை தழுவினாலும். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க தமிழ் சினிமா துறை அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டில் இருப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சுமார் கடந்த பத்து வருடங்களில் வெளியான எந்த ஒரு படங்களும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை. ஜெய் பீம் மற்றும் சூரரைப் போன்று படங்கள் கூட ஓடிடி தளத்தில் தான் வெற்றி அடைந்தது. அதன் பின்பு வந்த எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் வெளியிட்டு படு தோல்வியை சந்தித்தது.அந்த வகையில் ஜெய் பீம், சூரரைப் போற்றும் கூட திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்குமா? என்பது என்கின்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஒரு நடிகரின் நடிப்பில் வெளியாகும் படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து அவர் நடிக்கும் படத்தின் வியாபாரமும் இருக்கும், அந்த வகையில் சூர்யா நடிப்பில் சுமார் கடந்த 10 வருடங்களில் இதுவரை திரையரங்குகளில் ஒரு படம் கூட வெற்றி பெறாத நிலையில், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் படுதோல்வியை சந்தித்தது.

சூர்யா போன்று வேறு ஒரு நடிகர் இது போன்று தோல்வியை கொடுத்திருந்தால், சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் சென்று இருப்பார்கள் ஆனால் சூர்யா மட்டும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க அவருடைய குடும்ப கட்டுப்பாட்டில் தமிழ் சினிமா இருப்பது தான் என்கிற விமர்சனம் எழுந்து வருவது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இரண்டு தரப்பினர் அவரவர் விருப்பத்துக்கு படம் எடுப்பார்கள், அதில் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் முத்தையா இருவரும், அதில் பா.ரஞ்சித் சாதிக்கு எதிராக, அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பா.ரஞ்சித் படம் எடுப்பர், மறு பக்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமையை திரையில் காண்பித்து அந்த சமூக பழக்க வழக்கங்களை மய்யப்படுத்தி திரைப்படம் எடுத்து வரும் இயக்குனர் முத்தையா, இப்படி ஒருவர் சாதிக்கு எதிராக படம் எடுக்க மற்றொருவர் சாதி பெருமைகளை மய்யமாக படம் எடுத்து வருகிறார்.

ஆனால் இவர்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் பயணித்தாலும் இவர்களை அடுத்த கட்டத்துக்கு சினிமாவில் கொண்டு சென்றதில் நடிகர் காத்திக் முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியா வந்த இரண்டு படங்களில் சூரரை போற்று படத்தில் தன்னை ஒரு பெரியாரிஸ்ட் என காண்பித்து சமூக நீதி பேசிய சூர்யா, அடுத்த படமான ஜெய்பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படம் என தன்னை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க வந்த சமூகநீதி காப்பான் என காட்டி கொண்டார்,

அதே நேரத்தில் அவருடைய தம்பி கார்த்திக், கொம்பன், விருமன் என இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிப்பார், சூரரை போற்று ஜெய்பீம் போன்ற படங்களில் சமூகநீதி பற்றி பேசி அண்ணன் உருட்டுவது, முத்தையா படத்தில் தம்பி இந்த பக்கம் சாதி சாயம் கொண்ட இயக்குனர் படத்தில் நடித்து உருட்டுவது என விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.