அவன் தேவையே இல்லை… பாலா பிடிவாதம்… மன்னிச்சுடுங்க கதறும் சூர்யா – ஜோதிகா.. என்ன விஷயம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான மூன்று படம் தொடர் தோல்வியை சந்தித்து, பாலாவுக்கு மிக பெரிய சரிவை சினிமாவில் ஏற்படுத்தியது. மேலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த பாலா, குடும்பத்திலும் பிரச்சனை, சினிமாவில் தொடர் தோல்வி என ஒரு இக்கட்டான சூழலில் இருந்து வந்த பாலாவுக்கு உதவும் வகையில் முன் வந்தார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யாவை தமிழ் சினிமாவில் நந்தா படத்தில் அடையாளம் காட்டியவர் இயக்குனர் பாலா. அந்த நன்றிக்காக பாலாவுக்கு உதவி செய்யும் வகையில் தனது சொந்த தயாரிப்பில் பாலா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார் சூர்யா. மிக பெரிய சரிவை சந்தித்து மார்க்கெட்டை இழந்துள்ள பாலா இயக்கத்தில் படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் யாரும் முன் வரவில்லை. இதற்கு காரணம் பாலா இயக்கத்தில் படம் தொடங்குவது எளிது, ஆனால் அதை முடிப்பதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தான்.

இவை அணைத்தும் தெரிந்தும் கூட பாலா இருக்கும் கஷ்டமான சூழல் அறிந்து அவருடைய இயக்கத்தில் படம் நடிக்க முன் வந்தார்சூர்யா. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கியது. சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருப்பதால், இதற்கு இடைப்பட்ட காலத்தில் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விடலாம் என முடிவு செய்து, இந்த படம் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்படும் என பாலா உறுதியளித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கியது.

சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பில், அக்னி வெயிலில் சூர்யா மட்டும் படத்தின் கதாநாயகி இருவரும் ஓடுவது போன்ற கட்சி எடுக்கப்பட்டுள்ளது, காலை தொடங்கிய படப்பிடிப்பு மதியம் கடந்து தொடர்ந்து ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் ரீ – டேக் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஓடி கொண்டே இருந்த சூர்யா ஒரு கட்டத்தில் சோர்வு அடைந்துள்ளார். இருந்தும் பாலா விடுவதாக இல்லை.

ஒரு கட்டத்தில் கடுப்பான சூர்யா, உதவி இயக்குனரிடன் தனது கோபத்தை வெளிப்படுத்தியவர்,பேக் அப் என்று தெரிவித்துவிட்டு படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலே திரும்பினார். இதனால் புதிய படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது. இந்நிலையில் இந்த படம் பாதியிலே நின்றால் தயாரிப்பாளரான சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதால் மீண்டும் படத்தின் படத்தின் படப்பிடிப்பை தொடங்க பாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதால், விரைவில் பாலா படத்தில் நடித்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. ஆனால் படப்பிடிப்பு பாதியிலே ஓடிவிட்டான், அவனை வைத்து இனி நான் படம் எடுக்க போவதில்லை என பிடிவாதமாக பாலா இருந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி சூர்யா – பாலா இடையிலான பிரச்சனைக்கு பதில் சொல்லும் விதத்தில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சூர்யா தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்து பத்து நாட்கள் கடந்த நிலையில் இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்து பாதியிலே வெளியேறி என்னை அசிங்கப்படுத்திவிட்டான் சூர்யா அவனை வைத்து நான் மீண்டும் படம் எடுக்க போவதில்லை என தெரிவித்த பாலா. மீண்டும் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்றால் சில கண்டிஷனை போட்டுள்ளார் பாலா. செய்த தவறுக்கு சூர்யா மன்னிப்பு கேட்டும் பாலா பிடிவாதமாக இருக்கிறார்.

இதனை தொடர்ந்து இதுவரை இந்த படத்திற்கு செலவு செய்தது போனால் போகட்டும். மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி மேலும் பிரச்சனையாகி பாதியிலே நின்றால் மேலும் அதிக பணம் நஷ்டம் அடையும் என்பதால், இந்த படத்தை பாதியிலே கைவிட்டு விடலாம் என்கிற யோசனையில் தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிகா இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா – ஜோதிகா இருவரை கதற விட்டுள்ளர் பாலா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?