தப்பி ஓடி கர்நாடகாவில் தஞ்சம் அடைந்த ரஜினி-லதா ஜோடியை பொறி வைத்து பிடித்த எம்ஜிஆர்..!அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம் என்ன.?

0
Follow on Google News

தன்னுடன் நடிக்கும் நடிகைகள் உடன் மற்ற நடிகர்கள் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்காதாம். இது குறித்து முக்கிய சினிமா பிரபலம் ஒருவர் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா உடன் ஜெய்சங்கர் தொடர்பு வைத்திருந்ததால் ஜெய்சங்கர் பிடிக்காமல் போனதாகவும்,நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டு பின் எம்ஜிஆருக்கு தெரியாமலே நடிகர் விஜயகுமார் அதிமுகவில் இணைந்ததாகவும், இது போன்று தன்னுடன் நடித்த நடிகை லதா உடன் ரஜினிகாந்த் தொடர்பு வைத்திருந்த காரணத்துக்காகவே எம்ஜிஆர்-க்கு ரஜினிகாந்தை பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது நடிகை லதாவை ரஜினிகாந்த் காதலித்து வந்துள்ளார், ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்ததாக கூறபடுகிறது, இந்த தகவல் முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களுக்கு சென்றதை தொடர்ந்து ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தியுள்ளார் எம்ஜிஆர். பின் நடிகை லதா உடன் உன்னை பார்த்ததாக எனக்கு தகவல் வந்தது என்றால் உன்னை தொலைத்துவிடுவேன் என எச்சரித்து ரஜினிகாந்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து எம்ஜிஆர் எச்சரிக்கையை மீறியும் நடிகை லதாவை நடிகர் ரஜினிகாந்த் காதலித்து வந்துள்ளார்,ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூட அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, ரஜினிகாந்த்- லதா காதல் விவகாரம் திருமணம் வரை செல்ல இருக்கும் தகவல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கவனத்துக்கு சென்றதை அறிந்த ரஜினிகாந்த் – லதா இருவரும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

அதில் தமிழ்நாட்டில் இருந்தால் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதால், எம்ஜிஆரிடம் இருந்து தப்பிப்பதற்காக கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் ரஜினிகாந்த்- லதா இருவரும் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் விரைவில் பெங்களூரில் நடிகை லதாவை திருமணம் செய்து கொள்ள அணைத்து ஏற்பாடுகளையும் செய்ய திட்டமிட்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த், இந்த தகவல் எம்ஜிஆர் கவனத்துக்கு சென்றது.

உடனே எம்ஜிஆர் நெருங்கிய நபரான அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டு ராவ் அவர்களை தொடர்பு கொண்டு எம்ஜிஆர் இது தொடர்பாக பேசிய அந்த காதல் ஜேடிகளை பிரிக்க வலியுறுத்தியுள்ளார், இதன் பின்பு ஏற்பட்ட கடும் பிரச்சனைக்கு பின் வேறு வழியில்லாமல் ரஜினிகாந்த் -லதா காதல் ஜோடி பிரிந்துள்ளது. இதன் பின்னனியில் எம் ஜி ஆர் இருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது, தனது காதல் தோல்வியை தொடர்ந்து சில காலம் சோகத்தில் இருந்த ரஜினிகாந்த்.

இதன் பின்பு தன்னை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவை காதலித்த ரஜினிகாந்த், இரு குடும்பம் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார். கல்லூரி மாணவியாக பேட்டி எடுக்க வந்த லதா பெயரும் தனது முன்னாள் காதலி பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் ரஜினிகாந்த் இவர் மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது, திருமணத்துக்கு முன் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த், திருமணத்துக்கு பின் எந்த சில சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.