நடிச்ச ஹீரோ தான் இனி… சூரியின் அடிக்கும் அடுத்தடுத்து ஜாக்பாட்…

0
Follow on Google News

ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்து தனது தனித்துவமான நகைச்சுவையால் தனக்கு என்று தனி இடத்தை பிடித்தவர் தான் சூரி. ஆனால் இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு ஈசி இல்லை. சினிமாவில் தலைக்காட்டவே பல போராட்டங்களை சந்தித்தார்.

கடுமையான முயற்சிக்கு பிறகு மறுமலர்ச்சி படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைக்காட்டும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, வெண்ணிலா கபடிக் குழு படம் சூரிக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில், 50 புரோட்டா சாப்பிட்டால், 100 ரூபாய் வழங்கப்படும் என்றும், சாப்பிட்ட புரோட்டாவுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்றும் போட்டி நடத்தப்படும். போட்டியில் கலந்து கொண்ட சூரி, 50 புரோட்டா சாப்பிட்டு அன்றிலிருந்து புரோட்டா சூரி ஆனார்.

தனக்கென ஒரு கிராமத்து ஸ்லாங்கை உருவாக்கி கவனிக்க வைத்த சூரி, சீரியஸான காட்சிகளில் நடித்தது என்பது மிக மிக குறைவு. அப்படிப்பட்ட சூரி விடுதலை பாகம் 1 படத்தில் மொத்தமாக மாறி சிக்ஸ் பேக்ஸ், நடை, உடை என மொத்தத்தையும் மாற்றி கான்ஸ்டபிள் குமரேசனாக மனதில் பதிந்துவிட்டார். கான்ஸ்டபிள் குமரேசனை இரண்டாம் பாதியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

விடுதலை 1 திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை தயாரித்திருந்தார்.

தொடர்ந்து அவர் தற்போது தயாரிக்கும் புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். அவருடன் அனன்யா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.கொட்டுக்காளி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றிய துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த பிரபல மலையாள நடிகர் வேறு யாரும் இல்லை. அவர் நடிகர் உன்னி முகுந்தன் அவர்கள் தான். சூரியின் மார்க்கெட் இவ்வளவு உயர்வதற்கான காரணம் வெற்றிமாறன் தான். ஆகையால் அவர் கொடுக்கும் சம்பளத்தை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சூரி வாங்கிக் கொள்வார்.

இதனால் இப்போது சூரியின் படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருக்கிறார். மேலும் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்க இருக்கிறார். ஏற்கனவே லிங்குசாமியின் ஜி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். சமீபகாலமாக லிங்குசாமி இயக்கி வரும் படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் சூரியை கதாநாயகனாக வைத்து கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறாராம்.

மேலும் இதற்கான கதையை இப்போது தயார் செய்து வருகிறார். ஆகையால் லிங்குசாமி, வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதால் சூரி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய இருக்கிறார்கள்