சூர்யாவுக்கும் – சிவகுமாருக்கு என்ன பிரச்சனை… உருக்கமாக பதிலளித்த சிவகுமார்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கிசு கிசுவில் சிக்காத பழம்பெரும் நடிகர் சிவகுமார், சினிமா துறையில் சிவகுமார் குடும்பம் என்றாலே ஒரு மரியாதை உண்டு, அந்த அளவுக்கு தன்னை போன்று அவருடைய இரண்டு மகன்களையும் மிக ஒழுக்கமாக வளர்த்தவர் நடிகர் சிவகுமார், அவருடைய இரண்டு மகன்களுடன் சென்னையில் கூட்டு குடும்பமாக மிக நீண்ட காலம் வாழ்ந்து வந்தவர் சிவக்குமார்.

சிவக்குமார் வீட்டில் ஒரு பெரிய டைனிங் டேபிள் இருக்கிறது. இந்த டைனிங் டேபிளில் தான் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்போது சிவகுமார் , சூர்யா, கார்த்திக் என அனைவரும் தங்கள் அன்றாட அனுபவங்களை மிக மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வார்களாம், இப்படி சந்தோசமாக சென்ற குடும்பத்தில் சூர்யா மனைவி, குழந்தைகளுடன் மும்பையில் தனிக்குடித்தானம் சென்றது பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது.

ஏற்கனவே மனைவி வற்புறுத்தலின் பேரில் மும்பையில் சுமார் 200 கோடி முதலீடு செய்துள்ள நடிகர் சூர்யா, அதன் மூலம் மாதம் 20 கோடி லாபம் சம்பாரித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஜோதிகா – சூர்யா இருவரும் மும்பை செல்வதை தவிர்க்க முடியவில்லை. இதையே ஒரு முக்கிய காரணமாக வைத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகியுள்ள ஜோதிகா என கூறப்பட்டது.

மேலும் வணங்கான் பட பிரச்ச்னையின் போது இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என தெரிவித்த ஜோதிகா தற்பொழுது தமிழ் தவிர்த்து பிற மொழி படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் ஜோதிகா சினிமாவில் நடிப்பது தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் வணங்கான் படத்தில் ஏற்பட்ட பிரட்சனை தான் ஜோதிகா மும்பைக்கு தனி குடித்தனம் செல்வதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் சூர்யா குடியேறியுள்ளதால், அவருடைய தந்தையை விட்டு மிக தூரம் சென்று விட்டார் என்றும், இனி சென்னைக்கு அடிக்கடி வரமாட்டார் என்றும், இதனால் அவருடைய தந்தை சிவகுமார் மிக பெரிய வருத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் சமீபத்தில் மதுரை கிழடிக்கு சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர் குடும்பத்துடன் சென்றது கூட எங்கள் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என வெளிப்படுத்துவதற்காக தான் குடும்பத்துடன் இந்த கீழடி விசிட் என்று கூறப்பட்டது.

இருந்தும் சூர்யா மும்பையில் செட்டிலாகிவிட்டார், அதனால் தந்தை சிவகுமார் கோபத்தில் உள்ளார் என கிசு கிசு செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் நடந்த அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் மிக உருக்கமாக பேசியுள்ளார் சிவகுமார், அவர் பேசுகையில், ‘நான் எந்த கெட்டப்பழக்கமும் இன்றி படிப்பு, ஓவியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வந்தேன்.

எனக்கு நல்ல பிள்ளைகள் பிறந்ததால் இந்த மேடையில் நிற்கிறேன். எல்லாருக்கும் சொல்லிக்கொள்கிறேன், உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டும் என்றால் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்க இருக்க வேண்டும். அவர்களின் வெற்றி தான் உங்கள் வாழ்வின் இரண்டாம் கட்டம் நல்லாருக்கும். 50 வயதுக்கு பின் வேலை செய்ய முடியாது. கை, கால் ஓய்ந்துவிடும். அதனால் குழந்தைகளை நல்ல முறையில் வளருங்கள்.

அவர்களின் வெற்றியின் உங்கள் வாழ்வின் இரண்டாம் கட்ட வெற்றி என நடிகர் சிவகுமார் தன்னுடைய இரண்டு மகன்களை பற்றி மிக உயர்வாக உருக்கமாக பேசி, எங்கள் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என இதுவரை சிவகுமார் குடும்பத்தில் பிரச்சனை என்கிற வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் சிவகுமார்.