இத்தனை வருசமா நடிகர் சிவகுமார் கட்டி காப்பாற்றி வந்த பெயர்… சல்லி சல்லியாக உடைத்த இரண்டு மகன்கள்…

0
Follow on Google News

நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவின் பழங்கால நடிகர் ஆவார். 60களில் சினிமாவில் பயணத்தை தொடங்கிய சிவகுமார் அவர்கள், தொடர்ந்து 70களிலும் 80 களிலும் 90 களிலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவரைப் போலவே இவரது மகன்கள் ஆன சூர்யா கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்ன ஒரு அங்கீகாரத்தை பெற்று ஹிட் படங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படி குடும்பமே சினிமா துறையில் இருந்தாலும், சிவகுமார் அவரது பிள்ளைகளை தன் பேச்சை மீறாத வண்ணம் கண்டிப்புடன் வளர்த்துள்ளார். சினிமாவிலும் சரி குடும்பத்திலும் சரி சிவக்குமார் விதித்த கட்டுப்பாடுகளை அவர்கள் இருவரும் மீறுவதில்லை. இதுவரை தமிழ் சினிமாவில் எந்தவிதமான கிசுகிசுக்களும் வராத ஒரே நடிகர் என்றால் சிவக்குமார் தான்.

அந்த அளவிற்கு கட்டுக்கோப்பாக வாழ்ந்து வந்த சிவகுமார் தன் பிள்ளைகளும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்களை கண்டிப்புடன் வளர்த்துள்ளார். சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சிவகுமாருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கூட இல்லையாம். சிவக்குமார் குடும்பம் என்றாலே கட்டுப்பாடுடன் வாழும் குடும்பம் என்று ஒரு பெயர் உள்ளது.

தங்களது சினிமா வாழ்க்கை எந்த விதத்திலும் குடும்பத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை கெடுத்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் சிவகுமாருக்கு இப்போது அவரது பிள்ளைகளாலேயே பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. மேலும் சூர்யா கார்த்தி இருவரும் சிவக்குமார் பேச்சைக் கேட்காததே அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமீர்-ஞானவேல் ராஜா இடையேயான பருத்திவீரன் சர்ச்சை சோசியல் மீடியாவில் தலை தூக்கியது.

இந்த சர்ச்சைக்கு பெரும்பாலான இணையவாசிகள் இயக்குனர் அமீருக்கே ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்து வந்தனர். அதே சமயம், இயக்குனர் அமீரை ஞானவேல் ராஜா ஏமாற்றியதற்கு சூர்யா கார்த்தி இருவரும் வாயைத் திறக்காமல் இருக்கிறார்கள் என்றும் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இயக்குனர் அமீருக்கு ஏற்பட்ட இழப்புக்கு சிவக்குமார் குடும்பம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் பலர் விமர்சித்து வந்தனர்.

இந்த சூழலில், பிரபல திரை விமர்சகர் ஆன பிஸ்மி பருத்திவீரன் சர்ச்சையில் அமீருக்கு ஏற்பட்ட அநியாயமே சிவக்குமார் பெயரை கெடுத்து விட்டது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், அமீர் சர்ச்சை சிவகுமாருக்கு தெரிந்திருக்கும் எனவும், அமீர் கேட்கும் தொகை சிவகுமார் ஃபேமிலிக்கு பெரிய விஷயமே இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், சோசியல் மீடியா முழுவதும் பருத்திவீரன் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனையை எப்படியாவது முடித்து விடும்படி சிவக்குமார் சூர்யா கார்த்தி இடம் கண்டிப்பாக கூறி இருப்பார். ஆனால் அவர்கள் அப்பாவின் பேச்சை கேட்காமல் உதாசீனப்படுத்தியிருப்பார்கள். இதனாலையே இந்தப் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பிஸ்மி தெரிவித்தார். பொதுவாக சிவகுமார் இந்த மாதிரியான கெட்ட பெயர்களை வாங்குவதை விரும்ப மாட்டார், இப்படி 40 வருட காலமாக சினிமாவில் கட்டிக் காத்து வந்த பெயரை அவரது மகன்கள் ஒரே நொடியில் டேமேஜ் செய்து விட்டனர் என்று பிஸ்மி கூறியுள்ளார்.