சிவகுமார் மனுசனா நீ? ஆம்பளை நேர்ல வா… கிழித்து தொங்கவிட்ட சரத்குமார்… தீபாவளி அன்று என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகுமார் வீட்டில் தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 23ஆம் தேதி தீபாவளி பண்டிகையை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா என ஒட்டுமொத்த சிவகுமார் குடும்பமும் கோலாலமாக தீபாவளியை பண்டிகை கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தில் விருந்தினராக ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது சமீபத்தில் வெளியான வாரியார் படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடலுக்கு கார்த்திக்குடன் இணைந்து ராதிகா மற்றும் பலர் நடனமாடிய வீடியோவும் வெளியானது.

அது மட்டுமின்றி சிவகுமார் வீட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தான் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் ராதிகா. அதில் சிவகுமாருடன் இணைந்து ராதிகா நடித்த பாசப்பறவைகள் என்ற படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி தமிழே என்ற பாடல் ராதிகா வெளியிட்டுள்ள வீடியோ பின்னணியில் ஒளிக்கும் வகையில் சிவகுமார் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராதிகா வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா சரத்குமார் கொண்டாடிய தீபாவளி கொண்டாட்டம் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தை நார் நாராக சரத்குமார் கிழித்து தொங்கவிடும் வீடியோ ஒன்றும் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சரத்குமார் பேசுகையில்.

சிவக்குமார் எனது மனைவியிடம் வந்து உனது கணவர் சொத்தை எல்லாம் வித்து படம் எடுத்து அழித்துவிட்டாராமே என்று கேட்டதாக கூறிய சரத்குமார். ஒரு பெண்ணைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது? எனது சொத்தை எல்லாம் எழுதி கொடுத்து எனது மனைவி சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் இந்த சரத்குமார். சொந்த பந்தம், உறவுகள், நண்பர்கள் ஆகியோர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எனது சொத்தை கொடுத்தவன் நான். உண்மையான கர்ணன் நான்.

கேவலம் நான் எனது மனைவியின் சொத்தை விற்பவனா? 61 வயதான நான் 25 வயது இளைஞன் முன்பு நேருக்கு நேர் நிற்கும் தைரியம் இருக்கிறது. உடலில் வலிமை இருக்கிறது. நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா? உனக்கு எப்படி அப்படி எல்லாம் கேட்க தோன்றியது. உன்னை போய் அண்ணன் அண்ணன் என்று வாய் நிறைய நான் கூப்பிட்டுள்ளேனே! தைரியம் இருந்தால் நேரடியாக வந்து என்னிடம் கேள்? ஏன்ப்பா தங்கச்சி சொத்தையெல்லாம் வித்துவிட்டயாக்கும் என்று என்னிடம் கேள்.

எனது பொண்டாட்டி கிட்ட எதற்கு கேட்கிறாய்? தைரியம் இருந்தால் ஆம்பிளைக்கு ஆம்பிளையா வந்து கேள். பொம்பிளைகிட்ட கேட்காதே. எனது சொத்தை விற்று நண்பர்கள், உறவினர்களை காப்பாற்றுபவன் நான். நான் கட்டையில் போகும் போது கூட எனது சொந்த பந்தம் ரோட்டில் நிற்க மாட்டார்கள் கோடான கோடி கோபுரத்தில் தான் நிற்பார்கள். என்ன பார்த்து கேட்கிறார். அவரெல்லாம் ஒரு மனுசன்? என சிவகுமாரை கிழித்து தொங்க விட்டுள்ளார் சரத்குமார்.

இந்த வீடியோ இதற்கு முன்பு நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி என இருவரும் கடுமையாக மோதி கொண்டனர். இதில் விஷால் அணியினருக்கு சிவகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் முழு ஆதரவு தெரிவித்திருந்தனர். அப்போது நடந்த ஒரு நிகழ்வில் நடிகர் சிவகுமாரை மிகக் கடுமையாக சரத்குமார் பேசியிருந்த வீடியோ தான் தற்பொழுது சிவக்குமார் குடும்பத்துடன் ராதிகா தீபாவளி கொண்டாடியதை கிண்டல் செய்யும் விதத்தில் சரத்குமார் பேசிய வீடியோவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.