இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் ..தாத்தா நான் பார்த்தேன்… நாட்டாமை பட பாணியில் கண்ணால் பார்த்த சாட்சி…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் டி. இமான். அவரின் படங்கள் ஆரம்பக்கட்ட காலத்தில் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆக டி. இமான் முக்கிய காரணம் என கூறலாம்.

மேலும் சிவகார்த்திகேயன் முதன்முதலில் பாடியதும் இமானின் இசையில் தான். சினிமாவை தாண்டி சிவகார்த்திகேயன், இமான் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் திடீரென ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் – டி. இமான் காம்போ இணையவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இமான் சர்ச்சைக்குரிய பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது, தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது.

இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது” இவ்வாறு டி.இமான் கூறி இருந்தார். இதனால் சிவகார்த்திகேயனுக்கும் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்டுக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவால் தான், டி. இமான் மோனிகாவை 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார் என சமூக வலைதளங்களில் பரவலாகப் பேச ஆரம்பித்தனர்.

பின் இது குறித்து இமான் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட், சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர் தான். ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அவர் எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து எல்லாம் பண்ணி வைத்திருந்தார். ஒரு குடும்பம் சிதறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், நாங்கள் ஒற்றுமையாக வாழனும் என்று நினைத்து தான் சமாதானம் செய்ய சிவா முயற்சிகளை எடுத்தார்.

அது இமானுக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள் என்று கூறி இருந்தார். இமான் வைத்த குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

ஆனால் தன்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை காட்டிக்கொள்வதற்காகவே அந்த புகைப்படத்தை வெளியிட்டதாக சிலர் கூறினர். இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி அளித்திருந்த ஒரு பேட்டியில், “டி.இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை முதலில் நான் தான் பொதுவெளிக்கு கொண்டு வந்தேன். இமான் சொல்வதை பொய் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதனை சிவகார்த்திகேயன் ஏன் இன்னும் மறுக்கவில்லை. சிவகார்த்திகேயன் – இமான் விவகாரத்தில் ஆதாரத்தை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன்”‌ என்றார்.

ஏற்கனவே ஒரு முறை பிஸ்மி கொடுத்த பேட்டியில் கூட, மக்கள் பல விஷயங்களை மன்னித்து விடுவார்கள். ஆனால் சில விஷயங்களை மன்னிக்கவே மாட்டார்கள். அதில் ஒன்றுதான் நம்பிக்கை துரோகம். சிவகார்த்திகேயன் டி இமான் விஷயம் குறித்து, எனக்கு பல மாதங்களுக்கு முன்பே தெரியும். சிவகார்த்திகேயன் இமானுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் என்னிடம் இந்த விஷயத்தை ஆதாரங்களுடன் பகிர்ந்தார். ” என்று கூறியிருந்தார். இதனால் இமான் சிவகார்த்திகேயன் சர்ச்சை முடிவில்லாமல் போய்க்கிட்டே தான் உள்ளது. சிவகார்த்திகேயன் இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.