நன்றி மறந்து அனிருத்தை கழட்டி விட்ட சிவகார்த்திகேயன்… பனம் தான் இருவருக்கும் பிரச்சனையா.?

0
Follow on Google News

இசையமைப்பாளர் அனிருத்தை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ். அதே போன்று பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பின்பு தான் அவருக்கென ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் தனுஷ், அனிரூத், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரு டீமாக தான் இருப்பார்கள்.

அடுத்தடுத்து மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த சிவகார்திகேயனிடம் மீண்டும் தனுஷ் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க கால் சீட் கேட்டார். ஆனால் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்னை தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் நிரந்தரமாக பிரியும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது இருந்த கோபத்தில் இனி அவனிடம் இருக்கும் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லி அனிரூத்தை வலியுறுத்தியுள்ளார் தனுஷ். ஆனால் அதற்கு அனிருத் மறுத்துள்ளார், உடனே அனிருத்துடனான நட்பை தூண்டித்துள்ளார் தனுஷ். இதன் பின்பு அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தொடர்ந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்களை சொந்தமாக தயாரித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து அதை மிகப்பெரிய விலைக்கு விற்று விடுகிறார். அந்த வகையில் பழைய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தால் சம்பளம் அதிகமாக தர வேண்டும் என்பதற்காக புதுமுக இயக்குனர்களுக்கு குறைந்த சம்பளத்தில் வாய்ப்பளித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய பாண்டியராஜ் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து படம் பண்ணலாம் என்று சமீபத்தில் கேட்டதற்கு கூட அதிக சம்பளம் தர வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக மறுத்துவிட்டார் சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது மன்டேலா படத்தின் புதுமுக இயக்குனர் மாண்டேன் அஸ்வின் உடன் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் படங்களில் பெரும்பாலும் அனிருத் மற்றும் டி இமான் இருவரும் தான்
இசையமைப்பாளராக இருந்து வந்துள்ளார்கள். ஆனால் மண்டேலா இயக்குனரின் புதிய படத்தில் அனிருத்துக்கு பதில் பரத் ஷங்கர் என்கின்ற இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன், இதற்கு காரணம் அனிருத் இந்த படத்தின் உள்ளே வந்தால் சம்பளம் அதிகமாக தர வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக அனிருத்தத்தை கழட்டிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது இருந்த நட்புக்காக தனுஷ் உடன் சண்டையிட்டு விலகிய அனிரூத்தின் நட்பை அலட்சிய படுத்தியுள்ள சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் தர வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நண்பன் அனிருத்தை கழட்டிவிட்டுவிட்டார் சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சூர்யாவின் சூழ்ச்சியை சூரி புரிந்துகொள்ள வேண்டும்.. முக்கிய பிரபலம் எச்சரிக்கை..! என்ன சூழ்ச்சி தெரியுமா.?