ஏற்றி விட்டவர்களை கட் செய்து விட்டு… யாரும் நெருங்க முடியாத வட்டத்துக்குள் வாழும் சிவகார்த்திகேயன்..

0
Follow on Google News

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் இருந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் காமெடி நடிகருக்கான வாய்ப்பு தேடி வந்த போது, அவருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்து மெரினா படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இதன் பின்பு தனுஷ் உடன் 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்திற்கு பின்பு அவருக்கென ஒரு நடிகருக்கான அடையாளம் கிடைத்து, அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்தை தொட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பின்பு அவருடைய சினிமா மார்க்கெட் கிடு கிடுவென உயர்த்து, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வர தொடங்கினர் சிவகார்த்திகேயன், இதன் பின்பு பட வாய்ப்புகள் குவிய, பிசி நடிகரானார் சிவகார்த்திகேயன்.

இந்த காலகட்டத்தில் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஏற்றார் போல் கதையும் தயார் செய்து கால்சீட் கேட்டிருந்தார் இயக்குனர் பாண்டிராஜ், ஆனால் அந்த காலகட்டத்தில் நான் ரெம்ப பிசி என்கிற தோரணையில் சிவகார்திகேயன் பாண்டிராஜை புறக்கணித்து விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் பண்டி ராஜ் – சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையில் அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக வெடித்தது.

இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பகையை மறந்து இணைத்தது சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் கூட்டணி. இதே போன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற மெகா ஹிட் படங்களை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த இயக்குனர் பொன்ராம் உடனும் கசிவகார்த்திகேயனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும்,

மேலும் சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் sk மதன் மற்றும் RD ராஜா போன்றோர் உறவுகளையும் துண்டித்துள்ள சிவகார்த்திகேயன், தற்பொழுது தன்னுடைய நட்பு வட்டத்தை சுருக்கி கொண்டு, இதற்கு முன்பு நெருக்கமாக இருந்தவர்கள் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு தன்னை சுற்றி ஒரு வட்டத்தை போட்டு கொண்டுவிட்டார் சிவகார்த்திகேயன் என்கிறது சினிமா வட்டாரங்கள்.