ரஜினிகாந்த் உடன் இணைந்த சிவகார்த்திகேயன்… என்ன கதாபாத்திரம் தெரியுமா…மிகுந்த எதிர்பார்ப்பில் ஜெயிலர்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, இந்த படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என நான்கு நடிகைகள் நடிக்க, குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார். லிங்கா படத்துக்கு பின்பு தொடர்ந்து ஆக்சன் படங்களில் மட்டும் நடித்து வந்த ரஜினிகாந்த், அண்ணாத்தே படம் குடும்பம் சார்ந்த செண்டிமெண்ட் படம் என்பதால் படம் வெளியாகும் முன்பு மிக பெரிய எதிர்பார்ப்பு ரஜினிக்கு இருந்தது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது, இந்த படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடலை SP பாலசுப்ரமணியம் பாடியிருந்தார், இந்த படம் வெளியாகும் முன்பே கொரோனா தொற்றின் காரணமாக SPB இறந்துவிட்டார். இது ரஜினிகாந்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்பு SPB பாடிய ஓப்பனிங் படம் என பல எதிர்பாப்புக்கு மத்தியில் வெளியான அண்ணாதே திரைப்படம் எதிர்பார்த்தது போன்றே இருந்தது.

இருந்தும் இன்றைய இளம் தலைமுறையான 2K கிட்ஸ்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை, படம் வெளியானது முதல் தொடர்ந்து கேலி கிண்டலுக்கு உள்ளானது, மேலும் படம் சீரியல் போன்று இருக்கிறது என விமர்சனம் எழுந்தது, படம் நன்றாக இருந்தாலும் கூட இன்றைய தலைமுறைக்கு பிடிக்காததால் , எதிர்பார்த்த வசூலை அண்ணாத்தே பெறவில்லை, இதனால் மீண்டும் தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டு சன் பிக்சருக்கு ஒரு படம் நடித்து கொடுக்க முன் வந்தார் ரஜினிகாந்த்.

இதனை தொடர்ந்து சன் பிக்சர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் புதிய படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, ஆனால் சமீபத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் படம் நன்றாக இல்லை என்றாலும், 2K கிட்ஸ் களுக்கு பிடித்திருந்த ஒரே காரணத்துக்காக படம் வசூலை அள்ளி குவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இனி 2K கிட்ஸ்களுக்கு ஏற்றார் போல் அடி, தடி, அக்சன் என படம் முழுக்க ரத்த கறையுடன் இருக்கும் வகையில் ஜெயிலர் படம் உருவாக ரஜினிகாந்த் பச்சை கோடி கட்டியுள்ள நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய வேடங்களில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இளம் வயதில் வரும் கேரக்டரில் சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மிக குறைந்த நிமிடமே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருந்தாலும், விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் போன்று பேசும்படி இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் உடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க இருப்பது பற்றி விரைவில் படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் தாய்லாந்தில் நடந்த உச்சக்கட்ட சண்டை… என்ன காரணம் தெரியுமா.?