சங்கர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்… எப்படி சிவகார்த்திகேயன் இந்த வாய்ப்பை பெற்றார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் விருமன். இந்த படத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் பாடல் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றுள்ளார் அதிதி சங்கர். மருத்துவம் படித்து முடித்த அதிதி சங்கர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு முறையான நடனம், பாடல், நடிப்பு என அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

அதனால் அவர் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் இவருடைய நடிப்பை பார்த்தவர்கள், அதிதி சங்கருக்கு இது முதல் படமா.? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிகச் சிறப்பாக அவருடைய நடிப்பு இருந்தது. அதிதி சங்கர் நடித்த விருமன் படம் வெளியாவதற்கு முன்பே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவருக்கு 25 லட்ச ரூபாய் சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நடிகையின் முதல் படம் வெளியாகி, அந்த படத்தில் நடித்த அந்த நடிகைக்கு வரவேற்பு எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து தான், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும், அதே போன்று முந்தைய படத்தின் வரவேற்பை பொறுத்து அவருடைய சம்பளமும் உயர்த்தப்படும். ஆனால் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தில் அதிதி சங்கர் ஒப்பந்தமானதின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23 வது படம் மாவீரன், இந்த நிலையில் மிக விரைவில் 25 ஆவது படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயன், அந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற விருப்பம் சிவகார்த்திகேயனுக்கு இருந்துள்ளது. அதன் அடிப்படையில் சங்கர் மகளுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பை கொடுத்து, தன்னுடைய 25ஆவது படத்தை சங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கான திட்டம் தான் இது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிப்பில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார் சங்கர். இந்த படத்தை முடித்துவிட்டு ஒரு நகைச்சுவை கலந்த ஒரு கமர்சியல் படம் சிவகார்த்திகேயனை வைத்து சங்கர் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தை இயக்குவது குறித்து பார்க்கலாம் என்று தான் சிவகார்த்திகேயனிடம் தெரிவித்ததாகவும் உறுதியாக எந்த ஒரு பதிலும் சங்கர் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.