கணவர் உயிரை காப்பாற்றியவர்.. கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் நடந்து கொள்ளும் சிம்பு அம்மா…

0
Follow on Google News

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான பின்பு அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனை நேரில் சந்தித்த சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர். சார், சிலம்பரசன் நடித்த படங்களிலேயே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆன படம் இந்த படம் தான் சார். அந்த வகையில் தயாரிப்பாளரான உங்களுக்கு ரொம்ப நன்றி சார் என நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதேபோன்று நடிகர் டி ராஜேந்திரன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்கு மேற்கொள்ள சென்ற போது, அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர் ஐசரி கணேசன். இதெல்லாம் ஐசரி கணேசன் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சிம்பு குடும்பத்திற்கு செய்துள்ளார்.

சிம்பு தன்னுடைய தயாரிப்பில் ஒரு படம் நடித்துள்ளார். அந்த வகையில் சிம்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அமெரிக்காவில் உள்ள தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி டி ராஜேந்திரன் உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்கா சென்றபோது அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொடுத்துள்ளார் ஐசரி கணேசன்.

இந்நிலையில் டி ராஜேந்திரன் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்று மீண்டும் தமிழகம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஐசரி கணேசன் ஒருவர் என என கூறப்படுகிறது. ஆனால் இப்படி பல உதவிகளை செய்த ஐசரி கணேசனுக்கு சொன்ன வாக்குப்படி நடந்து கொள்ளாமல் மிகப் பெரிய மன உளைச்சலை கொடுத்த சிம்பு மற்றும் அவருடைய குடும்பத்தினரும். வெந்து தணிந்தது காடு தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஐசரி கணேசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதற்கான அட்வான்ஸ் தொகையும் பெற்றிருந்த நிலையில், தற்போது வெந்து தணிந்த காடு படத்திற்கு பின்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி படத்தில் நடிக்காமல், திடீரென கமலஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் காமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து தன்னிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன ஆச்சு.? எப்போது சிம்பு கால் சீட் தருவார் என நடிகர் சிலம்பரசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை ஐசரி கணேசன் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் சிம்பு குடும்பத்தினர் தகுந்த பதில் ஏதும் சொல்லவில்லை, மேலும் ஐசரி கணேசனை உதாசீனப்படுத்தியே வந்திருக்கிறார்கள். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஐசரி கணேசன். மேலும் இதை தனக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதி உள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஐசரி கணேசன், தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் சிம்பு படம் அடுத்தடுத்து தயாரிப்பதில் பிரச்சனைகள் சிக்கியுள்ளது. இந்நிலையில் சிம்பு மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது பிரச்சனை என்றால், பிரச்சனையை தீர்ப்பதற்கு யார் சரியான ஆட்கள் என்பதை தெரிந்து கொண்டு , அவர்களை தொடர்பு கொண்டு அண்ணே, நீங்கதான் இந்த பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும் என்று, அந்த நேரத்தில், காரியம் ஆக வேண்டும் என்றால் கால் பிடிப்பார்கள்.

ஆனால் காரியம் முடிந்ததும் நன்றியை மறந்து அவர்களை கல்தா கொடுப்பதில் சிம்புவின் தாயார் வல்லவர் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு மிகப்பெரிய முக்கிய காரணமே அவருடைய அம்மா தான் என்றும், அந்த வகையில் சிம்பு தாயார் என்ன சொல்கிறாரோ அதைத்தான் சிம்பு மற்றும் டி ராஜேந்திரன் கேட்பார்கள். இந்நிலையில் சிம்புவின் சினிமா வாழ்க்கை பரிதாபத்துக்கு போவதற்கு முக்கிய காரணமே உதவி செய்தவர்களிடம் நன்றி இல்லாமல் நடந்து கொள்ளும் சிம்புவின் தாயாரின் போக்குதான் என கூறப்படுகிறது.