அட்லீ மனைவியிடம் ஷாருக்கான் வரம்பு மீறிய செயல்… முகம் சுளிக்க வைத்த சம்பவம்…

0
Follow on Google News

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது, ஜவான் படத்தின் அனிருத் இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியானது, இருந்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை, ஒரு படத்தின் பாடல்கள் தான் அந்த படத்தை திரையில் பார்க்க ரசிகர்களை தூண்டும் விதத்தில் அமையும்.

அந்த வகையில் அனிருத் இசையில் வெளியான ஜாவான் படத்தின் பாடல்கள் சரி வர மக்களை கவரவில்லை என்பது ஷாருக்கானை வருத்தம் அடைய செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கவனம் செலுத்தி படத்தை மக்கள் மத்தியில் ரீச் செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளார் ஷாருக்கான், அந்த வகையில் சென்னையில் கல்லூரி ஒன்றில் நடந்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் ஷாருக்கான், அட்லீ ,விஜய்சேதுபதி, அனிருத் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டு அட்லி பேசுகையில், ஜவான் திரைப்படம் நடக்க காரணம் என்னுடைய அண்ணன் நடிகர் விஜய் தான், அவர் கொடுத்த மோட்டிவேஷன் தான் என்னுடைய கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே சென்று இப்படி ஒரு படம் இயக்கியிருக்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் படத்தில் வேலை செய்த போது, ஷாருக்கான் வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்தேன். ஆனால் ஜவான் கதையை சொல்ல சென்றபோது அந்த வீட்டின் கேட் எனக்காக திறந்தது.

ஜவான் திரைப்படத்தின் பணிக்காக தன்னுடைய மனைவி பிரியாவுடன் அமெரிக்கா சென்றபோது மனைவி கர்ப்பமான விஷயம் தெரியவந்தது. திருமணத்திற்கு பின் 8 வருடங்களுக்கு பிறகு குழந்தை என்பதால் மருத்துவர் 90 நாட்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றார். அதனால் இந்தியா திரும்பி வர முடியாத சூழல் ஏற்பட்டது என தெரிவித்த அட்லீ.

இதற்கு ஷாருக்கான் படப்பிடிப்பை தள்ளி வைத்துகொள்ளலாம் என தெரிவித்ததாகவும், இருந்தாலும் என்னுடைய மனைவி பெரிய தொடர்ந்து படத்தின் வேலை பார்க்க சொன்னார் என அட்லீ பேசினார். இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாருக்கான், தமிழ் வணக்கம் என தெரிவித்துவிட்டு ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசினார் அப்போது, இந்த மாதிரி ரசிகர்கள் கரகோஷத்துடன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என் வாழ்வில் இதுவே முதல் முறை என தெரிவித்த ஷாருக்கான்.

தமிழ் சினிமாவில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் அபார திறமை பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். என்றும், இதுபோன்ற சினிமா நிகழ்ச்சியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஆரம்பத்தில் இங்கு மணிரத்னம், சந்தோஷ் சிவன், ரஜினி, கமல் ஆகியோரே தனக்கு தெரியும். ஆனால் இப்போது அட்லி அனிருத்துடன் பணியாற்றியிருக்கிறேன் என ஷாருக்கான் பேசி கொண்டிருக்கையில்,

திடீரென மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டிருந்த அட்லீயின் மனைவி பிரியாவை பார்த்து, பிரியா நான் உங்களுக்கு தனியாக நன்றி சொல்கிறேன். நாம் இன்னொரு குழந்தையை produce செய்யலாம். நம்ம ரெண்டு பேரும் இல்ல. நீங்களும் அட்லீயும் சேர்ந்து தான். என ஷாருக்கான் பேசியதும் அங்கிருந்தவர்கள் ஷாக் ஆனார்கள், ஆனால் ஷாருக்கான் பேசிய இந்த பேச்சுக்கு அட்லீ மனைவி பிரியா விழுந்து விழுந்து சிரித்தார்.

தொடர்ந்து பேசிய ஷாருக்கான், நான் கோ புரொட்யூஸ் செய்கிறேன். நம்ம நண்பர்கள் தானே அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என அட்லீ மனைவியை பார்த்து ஷாருக்கான் பேசியது அங்கிருத்தவர்களை முகம் சுசுளிக்கும் வகையில் இருந்தது, இந்நிலையில் ஷாருக்கான் பேசிய இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ஷாருக்கான் போன்ற ஆட்களுக்கு தமிழகத்தின் கலாச்சாரம் என்ன தெரியும்,இவர்கள் மாதிரி ஆட்களை வரவழைத்து தமிழகத்தில் பேச வைத்தால், அடுத்தவர் மனைவியை பார்த்து எப்படி பேசவேண்டும் என்கிற நாகரிகம் இல்லாமல் இப்படி எல்லை மீறி பேசி சமூகத்தை சீரழித்து விடுவார்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.