சத்யராஜ் சொன்ன அந்த வார்த்தை… தூக்கி எறிந்த ஷங்கர்.. இந்தியன் 2 படத்தில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சத்யராஜ், பின்பு ஹீரோவாக வாய்ப்பு பெற்று 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அரசியல் சார்ந்த தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்தாலும், தற்போது வரை சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை படத்தை முறியடிப்பதற்கு எந்த ஒரு படமும் தமிழ் சினிமாவில் இதுவரை வரவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் சத்யராஜுக்கு குறைய தொடங்கியதை அடுத்து காமெடி கலந்த ஹீரோ படங்களை ஏற்று சத்யராஜ் நடித்து வந்தார். அதன் பின்பு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய சத்யராஜ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் அவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்திய அளவில் பேசப்பட்டது, இதனால் தெலுங்கு சினிமாவில் அதிக பட வாய்ப்புகளை பெற்று பிஸி நடிகரானார் சத்யராஜ்.

இந்த நிலையில் குணச்சித்திர வேடங்களில் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் சத்யராஜை சமீபத்தில் இயக்குனர் சங்கர் தன்னுடைய இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் இடம் பெறாத மிக கொடூரமான வில்லன் கதாபாத்திரம் போன்று இருப்பதை அறிந்த சத்யராஜ், இந்த படத்தில் தான் நடித்த பிறகு தனக்கு குணச்சித்திர வேடங்கள் மற்றும் நேர்மறை கதாபாத்திரங்கள் கிடைக்காது.

மேலும் இது போன்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரம் தான் கிடைக்கும் அதனால் தன்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடி விதமான சங்கர் கேட்ட 12 நாள் கால் சீட்டுக்கு 12 கோடி கேட்டு உள்ளார் சத்யராஜ். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சங்கர் தகவல் சொல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு. 12 கோடி கொடுத்து இவரை நடிக்க வைக்க தேவையில்லை என தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு நடிகரை சங்கர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது