நயன்தாராவுக்கு ஆப்பு வைத்த சாருக்கான்…. லேடி சூப்பர் ஸ்டார்க்கே இந்த நிலைமையா….

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’

நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் இந்தப் படத்தில் நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் பெயர் எந்த ஒரு பட்டமும் இல்லாமல் திரையில் வர, நயன்தாராவின் பெயரும் எந்த ஒரு பட்டமும் இல்லாமல் வந்தது. இது பாலிவுட்டில் நயன்தாராவின் முதல் படம் என்பதனால் பட்டம் பறிக்கப்பட்டதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். மறுபக்கம் பாலிவுட்டின் டாப் ஹீரோயின்கள் சண்டைக்கு வந்தாலும் வந்து விடுவார்கள் என்று பட்டத்தை விட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி ஜவான் படம் பார்த்த அனைவரும் ஷாருக்கான் பற்றியே தான் பேசி வருகிறார்கள். மேலும் வில்லன் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத் பற்றியும் பேசுகிறார்கள். ஷாருக்கானை வைத்து இப்படி சூப்பராக படம் எடுத்திருக்கிறாரே என அட்லி பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் யாரும் நயன்தாரா பற்றி பெரிதாக பேசவில்லை. லேடி சூப்பர் ஸ்டார் அழகாக நடித்திருந்தும் அவரின் பெயர் நேற்று ட்விட்டரில் டிரெண்டாகாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது.

மேலும் ஜவான் ரிலீஸ் நாளில் அது பற்றி இன்ஸ்டாகிராமில் நயன்தாரா எந்த போஸ்ட்டும் போடவில்லை. ஜவானில் தன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படாததை அடுத்து அட்லி மற்றும் ஷாருக்கான் மீது நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக ஆளாளுக்கு பேசினார்கள். இந்நிலையில் தான் நயன்தாராவுக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. ஜவான் படத்தின் வெற்றியை தன் கணவருடன் சென்று மும்பையில் கொண்டாடி இருக்கிறார் நயன். ஜவான் வெற்றிக்கொண்டாட்டம் முடிந்த கையோடு, அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்துக்காக நடிகை நயன்தாரா ரூ.11 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. 11 கோடி பணத்திற்காக தன் பட்டத்தை விட்டு விட்டதாகவும் பலர் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நயன்தாரா அறிமுகமான படம், ’ஐயா’. அதற்கு முன் அவர் பார்த்திபன் உட்பட சில இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் முதல் படத்திலேயே மாஸ் காட்டிய நயன்தாரா அடுத்ததாக கிளாமரிலும் கலக்கினார். பில்லா படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கைப்பற்றினார். ஏழு மணிக்கு ஷூட்டிங் என்றால் கரெக்டாக அந்த நேரத்தில் அவர் ஸ்பாட்டில் இருப்பார். ஷாட் முடிந்தால் கேரவனுக்குள் செல்வதோ, லேட்டாக திரும்புவதோ என எதுவும் இருக்காது. ஷாட் முடிந்தாலும் மற்றவர்கள் நடிப்பதை விரும்பிப் பார்ப்பார் நயன்தாரா.

இந்த தொழில் பக்திதான் அவர் வெற்றிக்கு காரணம்’என்கிறார் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர். கதை தேர்விலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் அதிக கவனம் செலுத்துபவர் நயன்தாரா. ’பொதுவா தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் ஓபனிங் இருக்கும். ஆனால், ஒரு ஹீரோயினுக்கு ஓபனிங்கை கொண்டு வந்தது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான்.