மது போதையில் ரஜினி இரண்டாவது மகள் செய்து அட்டூழியம்… கடவுள் போல் காப்பாற்றிய தனுஷ்…

0
Follow on Google News

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு தான் ஐஸ்வர்யா-தனுஷ் பிரிய போவதாக அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குனராக திகழ்கிறார். இவர் தன் தந்தையை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து இருந்தார்.

பின் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. ஆனால் சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதன் காரணமாக சௌந்தர்யா விவாகரத்து வாங்கி முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பதும் போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். பின் மறுமணம் செய்து கொண்டார்.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது அவர் ’கேங்க்ஸ் ’ என்ற வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நெள ஆபிரகாம் என்பவர் இந்த வெப்தொடரை இயக்க உள்ளார். இந்த வெப் தொடரின் நாயகனாக சமீபத்தில் சூப்பர் ஹிட்டான ‘போர் தொழில்’ படத்தில் நடித்த அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் குடும்பத்தில் சமீப காலமாக துரதிர்ஷ்டம் சுற்றி சுற்றி அடிக்கிறது போல. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளை காணவில்லை என ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இது அந்த சமயத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு விஷயம் பரவி வருகிறது.‌ சௌந்தர்யா ரஜினிகாந்த் அதிகமாக குடிப்பாராம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ட்டி தானாம். இந்நிலையில் ஒரு முறை குடித்து விட்டு போதையில் விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விஷயம் இப்போது பூகாம்பமாக வெடித்துள்ளது. நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்கும் பிரபலங்களின் வாகனங்கள் அதிகாலையில் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் லம்போர்கினி உருஸ்-ம் ஒன்று. இந்த கார் மாடலை தொழிலதிபர்களைக் காட்டிலும் அதிகம் திரை நட்சத்திரங்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களே பயன்படுத்தி வருகின்றனர். சௌந்தர்யா தனது காரில் ஆழ்வார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதியுள்ளார்.

இதனால் ஆட்டோ டிரைவருக்கு உயிர் போகும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தனுஷ்க்கு கால் செய்துள்ளார். இந்த விஷயம் ரஜினிகாந்த்க்கு கூட தெரியாதாம். உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு நடிகர் தனுஷ் வந்து சமாதான பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது. ஆட்டோ சேதத்திற்குண்டான பொருட்செலவையும், டிரைவரின் சிகிச்சைக்குண்டான பணத்தையும் கொடுத்து விட்டு சென்று விட்டாராம்.

இதற்கு பிறகே, சவுந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் சமரச பேச்சுவார்த்தையிலேயே இந்த பிரச்சினை முடிவடைந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் இதற்காக போலிஷ்க்கும் பணம் கொடுத்து கேஸ் இல்லாமல் முடித்துள்ளார். இந்த விஷயம் இன்னும் ரஜினிகாந்த்க்கு தெரியவில்லை. அவர் குடிப்பார். ஆனால் இவரின் பிள்ளைகள் மற்றும் மருமகன்கள் மோசம் என பிரபல அரசியல் விமர்சகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.