ரஜினிகாந்த் ஒரு பெண் பித்தகர்.! ஜெயலலிதாவிடம் அவர் என்ன செய்தார் தெரியுமா.? பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு.!

0
Follow on Google News

இன்று பிறந்தநாள் கொண்டாடடும் நடிகர் ரஜினிகாந்த் மீது பிரபல நடிகை மீரா மீதுன் பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்துள்ளார், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த்க்கு பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர் என அணைத்து துறையில் இருக்கும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்றே தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.

துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகை மீராமீதுன், இருவரும் பிராடு என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் முட்டாள் ரஜினிகாந்த் எங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ள மீரா மிதுன், தமிழக ஊடகங்களில் என்ன நடக்கிறது, ஏன் கர்நாடகத்தை சேர்ந்த முதியவரை தூக்கி பிடிக்க வேண்டும், அவர் உங்களுக்கு எவ்வளவு தருகிறார், அதை விட கூடுதலாக நான் உங்களுக்கு தருகிறேன், ரஜினிகாந்தை,தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றவும் என தெரிவித்த மீராமீதுன்.

மேலும் மோசடியான மனிதர் ரஜினிகாந்துக்கு முற்றிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிராக இருந்தார். ரஜினிகாந்த் பெண் பித்தகராக இருந்த காரணத்தினால் தான் அவருடன் நடிப்பதை ஜெயலலிதா மறுத்தார்.இதனால் ஜெயலலிதா பல சித்ரவதைக்கு ஆளானார் என்றும், ஆனால் ஜெயலலிதா முதல்வராக வந்த பின்பு அவருடைய காலில் விழுந்தவர் தான் ரஜினிகாந்த் என மிக கடுமையாக ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் செய்துள்ள நடிகை மீராமீதுன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பாரா? என கேள்வி எழுப்பிய மீரா மிதுன்.மேலும் ஒ.பன்னிர்செல்வத்தின் இந்த செயல் மறைந்த ஜெயலலிதாவை அவமரியாதை செய்வது போன்று உள்ளது, ஆனால் இதை அனைத்தையும் ஜெயலலிதா பார்த்து கொண்டே தான் இருக்கிறார், மேலும் கோலிவுட்டின் மிகப்பெரிய மோசடி, மாஃபியாவின் தலைவர் ரஜினிகாந்த் என குறிப்பிட்ட மீராமீதுன்.

ரஜினிகாந்த் ஏன் எங்களுடைய தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள், எங்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள் என்றும், ஜெயலலிதா ரஜினிகாந்தை வைக்க வேண்டிய இடத்தில வைத்திருந்தார், தமிழ்நாட்டில் வசிக்க ஜெயலலிதா காலில் விழுந்தவர் ரஜினிகாந்த், விரைவில் வேறு ஒரு பெண்ணின் காலில் ரஜினிகாந்த் விழுவார் என நடிகை மீராமீதுன் எல்லை மீறி அநாகரிகமாக விமர்சனம் செய்துள்ளது அனைவர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மீராமிதுன் இது போன்று கருத்து தெரிவிப்பது புதிதல்ல, அவர் தன்னை விளம்பரம் செய்துகொள்வதற்காக இது போன்று சர்ச்சை கருத்தை இதற்க்கு முன் பல தடவை தெரிவித்துள்ளார், நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சை கூறிய வகையில் கருத்து தெரிவித்து தன்னை பிரபல படுத்திக்கொள்ள முயற்சிக்கு மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் விளம்பரம் தேடி வருவது குறிப்படத்தக்கது.