ஒவ்வொரு முறையும் அந்த நடிகையால் தப்பித்து கொள்ளும் ரஜினி…. பரபரப்பை ஏற்ப்படுத்திய பயில்வான்..

0
Follow on Google News

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் ஜெயிலரில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமா, ஜாக்கி ஷெராஃப், ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, தமன்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. தொடர்ந்து ரஜினி நடித்த தர்பார், அண்ணாத்தே என இரண்டு படங்கள் தோல்வியடைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மூலம் ரஜினி கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் அப்பாவியாக எந்த வம்புக்கும் போகாத ஒரு கேரக்டரிலும், அதன் பின் திடீரென புலி போல் பாய்வதுமான கேரக்டரில் கண்டிப்பாக திரையரங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் அதனை கிண்டலடிக்கும் விதமாக பரோட்டா புகைப்படத்தை பதிவிட்டு முட்டை பரோட்டா வீச்சு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ட்ரெய்லரில், இந்த நோய் வந்தவர்கள் பார்ப்பதற்கு பூனை போல் இருப்பார்கள் திடீரென புலியாக மாறிவிடுவார்கள் என வசனம் வரும். அதனை கிண்டலடித்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், யார் அந்த புலி?’ ‘சண்டைக்காட்சில டூப் போடறவர்’ ‘அப்ப பூனை?’ ‘Self Troll’ என குறிப்பிட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்ததிலிருந்தே ரஜினியை சகட்டுமேனிக்கு ப்ளூ மாறன் கலாய்த்துவருகிறார்.

தற்போது ட்ரெய்லரை வைத்தும் அவர் கலாய்க்க தொடங்கியிருக்கிறார். இவர் பப்ளிசிட்டிக்காக தான் இதெல்லாம் செய்கிறார் என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் ஒரு பக்கம் இவ்வாறு பேச, மறுபக்கம் பயில்வான் ரங்கநாதன் ட்ரெய்லர் கேவலமாக உள்ளது என்று கூறி வருகிறார்.

ஜெயிலர் ட்ரைலர் குறித்த பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், டிரைலர் தான் ஒரு படத்திற்கு பூஸ்ட் மாதிரி, ஆனால் இந்த டிரைலரில் ரஜினிகாந்தை ஷூ பாலிஷ் போடவைத்து இருக்கிறார் நெல்சன். இனி பேச்சே கிடையாது வீச்சுதான் என ஒரு கையில் துப்பாக்கி, ஒரு கையில் அரிவாளுடன் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அந்த டிரைலரில் ரஜினிகாந்தின் முகத்தில் வயசானது தெரிகிறது.

எங்க சிங்கம், எங்க வேங்கையை இப்படி கேவலமாக காமிச்சி இருக்கீங்களே இது நியாயமா என்று பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன், மேலும், ரஜினிக்கு வயசு ஆகிவிட்டது என்று அனைவருக்கும் தெரியும், இதனால் தான் கார்த்திக் சுப்புராஜ் தனது படத்தில் ரஜினியை இளமையாக காட்டி இருந்தார். ஆனால், நெல்சன் நீங்க 72 வயது ரஜினியை 80 வயது கிழவன் மாதிரி கேவலமா காட்டி இருக்கிறீர்களே இது சரியா? எனவும் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி நயன் தாரா, ஸ்ரேயா என எல்லா நடிகைகளும் காட்ட வேண்டியதை காட்டிவிடுவார்கள். இவரோ சும்மா கையையும், காலையும் அசைத்து டான்ஸ் என்று சொல்லிவிட்டு நகர்ந்திடுவார், ஹீரோயின்களின் கிளாமரால் தான் ரஜினி தப்பிக்கிறார் என்றும் பேசியுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து காரணமாக ரஜினி – விஜய் இருவருக்கும் இடையில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையி,

விஜய் – ரஜினி ரசிகர்களுக்கு இடையிலான சண்டையும் சமூக வலைத்தளத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, அந்த வகையில் ரஜினியை கேலி கிண்டல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் ரங்கநாதனை விஜய் ரசிகர்களை கொண்டாடி வருவதையும் சமூக வலைதளத்தில் பார்க்க முடிகிறது.