தமிழர்களை இதற்கு மேல் யாரும் அவமானப்படுத்த முடியாது… ரஜினிகாந்த் மகளுக்கு தக்கம் பாடம் புகட்ட தமிழர்கள் தயார்….

0
Follow on Google News

கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். தற்பொழுது மகள் நடிப்பில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.

பின் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காக்கா- கழுகு கதை, விஜய் குறித்த காக்கா- முற்றுப்புள்ளி வைத்திருந்தார். மேலும், இந்த படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க குழு சோசியல் மீடியா பதிவுகளை காமிப்பாங்க. அதுல என் காதுல அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது.

எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. அவர் சங்கி இல்ல. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. இந்தப் படத்தைப் பார்த்தா உங்களுக்கு அது புரியும். இதுக்கு பிறகு இந்த படம் உங்க லிஸ்ட்ல இருக்கும். ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்குமட்டும் தான் இருக்கு.

நான் கர்வமாகச் சொல்றேன். யாரும் அதை பண்ணமாட்டாங்க. நீங்க இந்து, கிறிஸ்டியனா இருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீங்க.” என கூறினார். அவரின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் ஹீரோயினாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா பதிவு ஒன்று வைராகி வருகிறது.

ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பெங்களூருவை சேர்ந்த தான்யா பாலகிருஷ்ணா. இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பல படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் CSK vs RCB அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா செய்த ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில், “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்.” என பதிவிட்டு இருப்பார். நடிகை தன்யாவின் இந்த ட்வீட்டால் HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கானது. அதனால் கடுப்பான தன்யா “இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன். நான் நடிப்பதாக சொன்ன தமிழ் படங்களில் இருந்தும் வாபஸ் பெறுகிறேன். நான் இனி தமிழ் சினிமாவுக்கு வரவே மாட்டேன்” என கூறியிருந்தார்.

இதனால் இவருக்கு எதிராக நிறைய கண்டனங்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் ‘ஹேட்தன்யா’ என்ற ஹாக்ஸ் டேக்குகள் ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி தமிழர்களை கொச்சையாக பேசிய தான்யா பாலகிருஷ்ணா தான் இன்று ‘லால் சலாம்’ படத்தின் ஹீரோயின். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது இவர் பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினியாக ஐஸ்வர்யா நடிக்க வைத்திருக்கிறார். இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தலீவரை சங்கீ இல்லை என்று கூறி ஐஸ்வர்யா இதற்கு என்ன பதில் கூறுவார்?என நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.