இறங்கி வந்து தன்னுடைய கௌரவத்தை விட்டு கொடுத்த ரஜினி… காது கொடுத்து கேட்காத தனுஷ்..

0
Follow on Google News

சினிமாவில் ஒய்யாரத்தில் கெத்தாக இருக்கும் ரஜினிகாந்த், தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவால் தனது கௌரவத்தையும் விட்டுக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் அதிகாரப்பூர்வ விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் ரஜினி பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் கூறியிருக்கும் விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஜினிகாந்த் குடும்பத்தில் நடக்கும் ஏராளமான சிக்கல்களை கண்டு அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவாராம். தற்பொழுது, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனைப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகின்றன. சுமார் 17 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா- தனுஷ் தம்பதியினர், இப்போது சட்டப்படி விவாகரத்து பெற வேண்டும் என்று விடாப்பிடியாய் இருந்து வருகின்றனர்.

இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பிரிந்து வாழும் இவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்த ரஜினிக்கு மகளின் விவாகரத்து விஷயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதனால் அவர் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேரப்பிள்ளைகள் இருவரும் வளர்ந்து வரும் சமயத்தில், மகளும் மருமகனும் விவாகரத்து கேட்டு சண்டை போடுவது ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஆனால் இந்த விவகாரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் யார் பேச்சையும் கேட்காமல் விடாப்பிடியாய் இருக்கிறார்களாம். இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் பேசுகையில், “ரஜினி குழப்பமான மனநிலையில் இருந்தால் உடனடியாக இயக்குனர் கே பாலச்சந்தரிடம் தான் செல்வார்.

அப்படி ஒருமுறை ஐஸ்வர்யாவால் பிரச்சனை வந்த போது, உடனடியாக ரஜினி பாலச்சந்தர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். மேலும் பாலச்சந்தரிடம் நடந்த பிரச்சனையை சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட பாலச்சந்தர் “நீ உடனடியாக சிஎம் ஜெயலலிதாவுக்கு போன் பண்ணு” என்று சொல்லி இருக்கிறார். ரஜினி சற்று தயக்கத்துடன் “நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுவேன்” என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில் அந்த சமயம் ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. ரஜினி அப்படி சொன்னதும் “உனக்கு பொண்ணு முக்கியமா உன் கௌரவம் முக்கியமா” என்று பாலச்சந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அதை எடுத்து தன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து ஜெயலலிதாவிடம் நடந்த பிரச்சனையை கூறி இருக்கிறார் ரஜினி. ஜெயலலிதாவும் உடனடியாக அந்த பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார் என அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இப்படி தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்வதற்கு முன்பே மிக பெரிய பிரச்சனையில் சிக்கிய போது, தன்னுடைய கௌரவத்தை விட்டு கொடுத்து ஜெயலலிதா உதவியை மக்களுக்காக கோரினார், ஆனால் தற்பொழுது வயதான காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ரஜினி வேதனை அடையும் வகையில் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here