இரண்டாவது திருமணத்திற்கு ரஜினி எதிர்ப்பா.? முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா…

0
Follow on Google News

அண்மைக்காலமாகவே ரஜினி பற்றிய பல சர்ச்சையான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் ரஜினிகாந்த் மாலத்தீவு சென்ற செய்தி தீயாய் பரவிய நிலையில், ரஜினிகாந்த் மாலத்தீவு சென்றதிற்கு பின்னனியில் பல்வேறு காரணங்கள் என ஒவ்வொரு செய்தியாக வெளியானது. அதில் முக்கியமா ரஜினிகாந்துக்கு அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட பிரட்சனை என்று சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கொழுத்தி போட்ட சம்பவம் பற்றி எரிந்தது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷம் கடந்து வருடம் பிரிய போவதாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்த சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன்னுடன் பணிபுரியும் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாகவும்.

இதை அவரின் தந்தையிடம் தெரிவித்த போது, கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஜினிகாந்த், மகள் மீது உள்ள கோபத்தில் மன அமைதிக்கான மாலத்தீவு சென்றதாக கூறப்பட்டது. மேலும் ரஜினிகாந்த் எப்பொதும் வெளியே எங்கே சென்றாலும் உடன் குடும்ப உறுப்பினர்கள் செல்வார்கள், ஆனால் இம்முறை யாரும் செல்லாததற்கு குடும்பத்தின் மீது ரஜினிக்கு இருந்த கோபம் தான் என்றும் கிசு கிசுக்கள் வெளியானது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இமயமலை சென்றால் கூட உடன் மகள் ஐஸ்வர்யாவும் சென்று வந்த நிலையில், தனியாக ரஜினி மாலதீவுக்கு செல்வதற்கு முன்பு, மகளுடன் இன்னாரு திருமணம் செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி, தன் மகளிடம் தனுஷ் விவாகரத்து பெறும் ஐடியாவில் இல்லை. அவர் அந்த எண்ணத்தில் இருந்திருந்தால் உன் மகன்கள் மீது இவ்வளவு பாசமாக இருக்க மாட்டார்.

அவர் மகன்கள் மீது காட்டும் பாசம் உன்மீதும் நேசமாக மாறும், நீ பொறுமையா இரு, இதுபோன்று தவறான முடிவெல்லாம் எடுக்காதே என ரஜினி தன் மகளுக்கு அறிவுரை கூறியதாகவும் தகவல் பரவியது. இப்படி ரஜினி மகள் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும், அதனால் ரஜினி கோபத்தில் இருப்பதாக ஒரு பக்கம் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் விதமாக, ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த நிலையில், தனது அப்பா ரஜினிகாந்த் உடன் மகள் ஐஸ்வர்யா எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தான் அவர் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. அதாவது எனக்கும் என் தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, வேலை வெட்டியில்லாதவர்கள் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள், யாரும் அதை நம்ப வேண்டாம் என்று உணர்த்துவதற்காக தான் ஐஸ்வர்யா ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம், மற்றும் ரஜினி – ஐஸ்வர்யா இருவருக்கும் சண்டை என இந்த பொய்யான செய்தி காட்டு தீ போன்று பரவ முக்கிய காரணம் பயில்வான் ரங்கநாதன் தான் முதல் முதலில் சர்ச்சை கூறிய வகையில் பேசி கிளப்பி விட்டது என்றும், அவர் பேசிய பின்பே இந்த செய்தி பரவியதாக கூறப்படுகிறது, அந்த வகையில் பயில்வான் இனிமேலாவது இது போன்ற தவறான செய்திகளை பரப்ப கூடாது என பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினி எதற்காக மாலத்தீவு சென்றார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.மேலும், மாலத்தீவை ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாக மாற்ற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் நினைப்பதால், ரஜினியை இலவசமாக அழைத்து செல்லப்பட்டு அதை புகைப்படமாகவும் வெளியிட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிது.