ரஜினி – தனுஷ்.. இவர்களால் தான் எனக்கு இப்படி ஆச்சு… கடும் கோபத்தில் கொட்டி தீர்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

0
Follow on Google News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் பாடம் படு தோல்வியை சந்தித்தது. ஆகவே தற்போது படக்குழுவினரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் கடும் அப்செட்டில் இருந்து வரும் நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தாலும் கூட குறிப்பாக திரைக்கதை, ஸ்கிரிப்ட் போன்றவற்றில் ஐஸ்வர்யா சொதப்பி வைத்திருப்பதாக ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை முன் வைத்திருந்தனர். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கியது. மேலும், இந்தப் படத்தை தயாரித்து லைக்கா நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்து விட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

லால் சலாம் படம் தான் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஐஸ்வர்யா தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “இந்த படத்தின் அப்டேட் வரும்போது எல்லாம் விடாமுயற்சி மற்றும் வேட்டையன் போன்ற படங்களின் அப்டேட்களை தான் ரசிகர்கள் கேட்பார்கள். அதை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது.

இப்போது சொல்கிறேன் இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு நானும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருப்பேன்” என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அந்த அளவிற்கு லால் சலாம் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படியான நிலையில், படம் படுமோசமாக தோல்வி அடைந்ததை எண்ணி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் ஐஸ்வர்யா.

அதுமட்டுமின்றி படத்தில் தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்து விட்டதாகவும், ரஜினிகாந்த் படம் என்ற எண்ணத்தில் படம் பார்க்க வந்ததால் இப்படி ஆகி இருக்கலாம். மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிகாந்த் பதிலாக இன்னொருவரை நடிக்க வைத்திருந்தால் மக்கள் நிச்சயம் படத்தை கொண்டாடி இருப்பார்கள் என்று ஐஸ்வர்யா பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக, 3 படத்தின் தோல்விக்கும் தனுஷ் பாடி அனிருத் இசையில் இடம்பெற்ற கொலவெறி பாடல் தான் காரணம் என்று ஐஸ்வர்யா கூறியிருந்த நிலையில் தற்பொழுது லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்ததால் படம் தோல்வியை சந்தித்து உள்ளது என ஐஸ்வர்யா அவருக்கு நெருக்கமாவர்களிடம் பேசி வருவதெல்லாம் ஏற்று கொள்ள முடியாது, காரணம், லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பதால் தான் ஐஸ்வர்யா இயக்கிய இப்படி ஒரு படம் எடுத்துள்ளார் என்பது மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதே போன்று 3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் மட்டும் இல்லை என்றால் அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டது கூட யாருக்கும் தெரியாது, அந்த வகையில் 3 படத்துக்கு கொலவெறி பாடலும், லால் சலாம் படத்திற்கு ரஜினிகாந்த் கேமியோ ரோல்ம் விளம்பரத்தை பெற்று தந்தாலும் கூட, மிக மோசமான கதை, இயக்கம், திரைக்கதை என இயக்குனராக ஐஸ்வர்யாவின் செயல்பாடுகள் படு மோசமாக இருந்ததால், படு கேவலமான தோல்வியை சந்தித்துள்ளது.

அந்த வகையில் இயக்குனராக ஒரு படம் எடுப்பதற்கு சில தகுதிகள் வேண்டும், அந்த வகையில் இயக்குனராக எந்த ஒரு தகுதியும் இல்லாமல், ரஜினிகாந்த் மகள் என்கிற ஒரே அடையாளத்தை வைத்து கொண்டு, படம் இயக்கி அது மண்ணை கவ்வியதும், அதில் இடம் பெற்ற பாடல் தான் என் படத்தை தூக்கி சாப்பிட்டு விட்டது, ரஜினிகாந்த் பதில் வேறு ஒருவர் நடித்திருந்தால் இது மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கும் என ஐஸ்வர்யா இதற்கு முன்பு பல வெற்றி படங்களை கொடுத்த மிக பெரிய இயக்குனர் என்கிற நினைப்பில் பேசிவருவதை நிறுத்திவிட்டு இனி சினிமா சார்ந்த தொழிலை கைவிட்டு விட்டால் அதுவே அவர் இந்த தமிழ் சினிமாவுக்கு செய்கின்ற நன்மை என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.