கண்ணீர் மல்க சொத்துக்களை விற்ற நெப்போலியன்… அமெரிக்கா தொழில் என்ன ஆச்சு..?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாடு நோய் காரணமாக பாதிக்கப்பட்டு பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

மகன் அமெரிக்காவில் தாங்கி மருத்துவ சிகிச்சை செய்து வருவதால், மகனுக்காக அமெரிக்காவில் டென்னிஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் குடியேறினார் நெப்போலியன். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் குடியேறிய நெப்போலியன் சினிமாவில் கவனம் செலுத்துவதை குறைத்து கொண்டு சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கியவர் அந்த கம்பெனியில் சுமார் 1500 பேர் வேலை செய்யும் அளவுக்கு தன்னுடைய ஐடி கம்பெனியை வளர்ச்சி அடைய செய்துள்ளார்.

பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக நெப்போலியன் ஐடி கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன். சினிமா துறையில் இருந்து தொழிலதிபராக தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்களில் பலர் தங்களின் தொழிலில் வீழ்ச்சி அடைந்து மீண்டும் சினிமாவுக்கு வந்தனர்.

அந்த வகையில் நடிகர் நெப்போலியன் மிகப் பெரிய வெற்றியை தொழில்துறையில் பெற்று தொழில் அதிபராக வலம் வருகிறார். அமெரிக்காவில் ஐடி கம்பெனி மட்டுமின்றி சுமார் பல நூறு ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன். இந்த நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டிலாகி உள்ள நெப்போலியன்.அவர் சினிமா துறையில் பணியாற்றியபோது அவருடைய அலுவலகத்தில் வேலை செய்தவர்களுக்கு தற்பொழுது வேலை இல்லை என்றாலும் கூட மாதம் ரூ. 25000 ரூபாய் தொடர்ந்து சம்பளம் கொடுத்து கொண்டிருக்கிறார் நெப்போலியன்.

சமீபத்தில் அப்படி இவரிடம் வேலை செய்த தொழிலாளரின் பெண்ணின் திருமணத்திற்கு அவர் கேட்காமலேயே பத்து லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார் நெப்போலியன். மேலும் மூத்த மகன் தனுஷ் தசைவளக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் மருத்துவமனை ஓன்று ஏற்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அணைத்து உதவிகளையும் செய்து வருகிறார் நெப்போலியன்.

தன் மகனைப் போல் மற்ற யாரும் பாதிக்கப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த மருத்துவமனையை நெப்போலியன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டில் ஆக உள்ள நெப்போலியன், சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தை சுமார் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் நெப்போலியன்.

தன் பார்த்து பார்த்து ரசித்து கட்டிய தன்னுடைய வீட்டையும், தன்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தன்னுடைய அலுவலகத்தையும் கண்ணீர் மல்க நெபோலியன் விற்பனை செய்துள்ளார், இருந்தும் எதிர்காலத்தில் நிரந்தரமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகும் முடிவில் இருக்கும் நெப்போலியன் தமிழ்நாட்டில் தனக்கு சொந்தமான சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று அமெரிக்காவில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.