மீண்டும் இணையும் மோகன்லால், மீனா ஜோடி நடிப்பில் விரைவில் திரிஷ்யம் 3ம் பாகம் கதையுடன் படப்பிடிப்பு…

0
Follow on Google News

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் மோகன்லால், மீனா நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்தது திரிஷ்யம் திரைப்படம். நல்ல வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் திரைப்படத்தை இயக்குனர் ஜித்து ஜோசப்பே தமிழில் பாபநாசம் என்று ரீமேக் செய்தார். தமிழில் வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமல் கெளதமி நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரிஷியம் திரைப்படம் முடிவுற்ற படம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது. திடீரென்று திருஷ்யம் 2வது பாகத்தின் கதையை உருவாக்கினார் ஜீத்து ஜோசப். இந்தத் திரைப்படத்திலும் நடிகர் மோகன்லால் மீனா நடிக்க ஒப்புக் கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷ்யம் 2வது பாகம் கடந்த பிப்பிரவரி 19ம் ஓடிடி-தளத்தில் வெளியிடப்பட்டது. திரிஷ்யம் முதல் பாகத்தை விட மிக பெரிய அளவில் வெற்றி சந்தித்தது திரிஷ்யம் 2வது பாகம், ஒவ்வொரு காட்சியும் திரில்லாக நகர்த்தி சென்றது. திரிஷ்யம் முதல் பாகத்தை விட 2வது பாகம் உலக அளவில் திரும்பி பார்க்க வைத்தது.

தற்போது திரிஷ்யம் 3வது பாகத்திற்கான கிளைமாக்சை நடிகர் மோகன்லால் பகிர்ந்துள்ளார். இதற்கான கதையை தயார் செய்து வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம் 2 திரைப்படத்தை விட திரிஷ்யம் 3 விரைவாக முடிக்க உள்ளார்.