நன்றி உணர்வு இல்லாத கமல்ஹாசன்… தரமான சமபவம் செய்து அவமானப்படுத்திய சுபாஷ்கரன்..!

0
Follow on Google News

இலங்கை தமிழரான சுபாஸ்கரன் லண்டனில் லைக்கா மொபைல் என்கின்ற மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமானவர். லண்டனிலே செட்டிலாகி மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்து வருகின்றவர். தமிழ் சினிமா மீது உள்ள ஆர்வத்தில், நல்ல படங்களையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும், மேலும் தொழில் ரீதியாக சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சுபாஸ்கரன்.

விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் தன்னுடைய தயாரிப்பு தொழிலை தொடங்கிய சுபாஸ்கரன் தொடர்ந்து பல தமிழ் சினிமா படங்களை தயாரித்து தன்னுடைய லைக்கா நிறுவனம் மூலம் அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார் சுபாஸ்கரன். பெரும்பாலும் லண்டனில் இருக்கும் சுபாஷ்கரனை, சினிமா துறையினர் சந்திக்க வேண்டும் என்றால் லண்டன் சென்று அனுமதி பெற்று சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் லைக்கா நிறுவனத்தின் முழு பொறுப்பையும் தமிழ் குமரன் என்பவரிடம் கொடுத்துள்ளார் சுபாஸ்கரன். அவர் தான் புதிய படம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவர் இறுதி செய்வது மட்டுமே சுபாஸ்கரன் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல வருட கனவாக பொன்னியின் செல்வன் படத்தை திரைப்படமாக எடுக்க பலர் முயற்சி செய்தும் அதற்கான போதிய பண இல்லாத காரணத்தினால் கைவிடப்பட்டது.

பலரின் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கும் வகையில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து உலகெங்கும் வாழும் தமிழக மக்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தை விருந்தாக்கினார் சுபாஸ்கரன். சமீபத்தில் பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்திருந்த சுபாஸ்கரன் சென்னை லீலா பேலஸில் தங்கி அங்கே சென்னை லீலா பேலஸில் நடந்த சக்சஸ் பார்ட்டியை முடித்துவிட்டு அதே ஹோட்டலில் தங்கினார் சுபாஸ்கரன்.

நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான அழைப்பை கமலஹாசன் நேரடியாக சென்று சுபாஷ்காரனை சாதித்து அழைப்பு விடுத்துள்ளார், மேலும் சுபாஷ்கரன் வசதிக்காக அவர் தங்கியுள்ள லீலா பேலஸில், கமல்ஹாசன் அவருடைய பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார். கீழ் தளத்தில் பிறந்தநாள் பார்ட்டி நடந்து கொண்டிருக்க, மேல் தளத்தில் தங்கி இருந்த சுபாஷ் கரன் இறுதி வரை அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

கமல்ஹாசனின் பாட்டியை சுபாஸ்கரன் புறக்கணிப்பதற்கான பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்காக பெருந்தொகையை சுபாஸ்கரன் முதலீடு செய்து இதனால் மணிரத்தினத்திற்கு மட்டும் 100 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது. அதேபோன்று நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் சபாஷ் நாயுடு மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு கமல்ஹாசனுக்கு இதுவரை 200 கோடி வரை சுபாஸ்கரன் கொடுத்துள்ளார்.

இப்படி இவர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ள சுபாஸ்கரனுக்கு தெரியாமல், கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்க இருப்பதாக கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு முதல் நாள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து லைக்கா நிறுவன பொறுப்பாளர் தமிழ் குமாரனை அழைத்து கேட்டுள்ளார் சுபாஸ்கரன்,

அதற்கு அவர் நமக்கு தெரிந்தால் நாம் இந்த ப்ரோஜெட்டை கேட்போம் என்பதர்க்காக நமக்கு தெரியாமலே ரகசியமாக பேசி முடித்துள்ளார்கள் , எனக்கே அறிவிப்பு வெளியான பின்பு தான் தெரியும் என தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். இதை கேட்டு செம்ம டென்ஷனான சுபாஷ்கரன். நாம் இவர்கள் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தும் நமக்குத் தெரியாமல் இப்படி ஒரு ப்ராஜெக்ட்டை ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு பேசி முடித்துள்ளார்கள். இதுபோன்ற நன்றிகெட்ட மனிதர்களும் தமிழ் சினிமாவில் இருக்கின்றார்கள் என்கின்ற கோபத்தில் கமல்ஹாசனை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியை புறக்கணித்துள்ளார் சுபாஸ்கரன் என கூறப்படுகிறது.