நம்பி வந்த லிங்குசாமியை நடுத்தெருவில் விட்ட கமல்ஹாசன்…

0
Follow on Google News

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு பக்கம் கட்சிப் பணி , மற்றொரு பக்கம் சினிமா சூட்டிங் என பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 70 களிலும் எண்பதுகளிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த கமலஹாசன், 90களின் இறுதிக்குப் பிறகு குறைவான படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

90களின் இறுதியில்டைரக்ஷனில்கவனம் செலுத்திய இவர், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1, விஸ்வரூபம் 2 என தான் இயக்கிய படங்களில் தானே நடித்து வந்தார். அதன் பிறகு, சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்திருந்தார். பின்னர், 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

விக்ரம் படத்தின் அபார வெற்றியை கண்டு உற்சாகமடைந்த கமலஹாசன், தற்போது சினிமாவில் அவரது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது மணிரத்தினம் இயக்கும் தக்லைஃப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களையும் தயாரித்து வருகிறார்.

இவ்வாறு, சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து மிகப்பெரிய இயக்குனர்களின் கூட்டணியில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன் குறித்து பலரும் அறிந்திராத விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார். கமல் குறித்து செய்யார் பாலு தெரிவித்திருக்கும் விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி கமல் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகியிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அத்துடன் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கமல் நிறைய படங்களை தனது லைன் அப்பில் வைத்துள்ளார். கமல்-மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த நாயகன் திரைப்படம் இன்று வரை சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது இந்தக் கூட்டணி தக் லைப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகை திரிஷா, ஜெயம் ரவி போன்ற முன்னணி பிரபலங்களும் நடிக்க கமிட் ஆகி உள்ளனர். நாயகன் படத்திற்கு பிறகு கமல் மணிரத்தினம் இணையும் படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. மேலும், படக்குழுவினர் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக எடுத்து வருகின்றனர். இப்படியான சூழலில், கமல் குறித்த பலரும் அறிந்திடாத தகவலை செய்யாறு பாலு கூறியிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கமல் ஹாசனின் ஒரு பிறந்தநாளில் பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடினார்கள். அப்போது ஒரு இயக்குநரும், தயாரிப்பாளரும் கமல் ஹாசனை பார்த்ததும் குடிபோதையில் சென்று அவரது தோள் மேல் கையை போட்டுக்கொண்டு, நாம் ஒரு படம் பண்ணுவோம் சார் என்று சொல்லிவிட்டார்கள். அந்த இயக்குநர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் அண்ணன், தம்பியை வைத்து தனது வாழ்க்கையில் நடந்ததையே ஒரு படமாகவும் எடுத்தவர்.

பிறந்தநாள் விழாவில் இயக்குனரும் தயாரிப்பாளரும் அப்படி நடந்து கொண்டது கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் வெளியில் காட்டிக் கொள்ளாத கமல்ஹாசன் “சரி வாங்க படம் பண்ணலாம்” என்று கமிட்மெண்ட் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் பல கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். அன்று கமலிடம் தக்க மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதினால் தான் அவர்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டார்கள் ” என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் இவ்வளவு விவரங்களை பேசிய பாலு, அந்த இயக்குனர் தயாரிப்பாளர் யார் என்பதை வெளியிடவில்லை.