மாமியார் கண்ட்ரோலில் ஜெயம் ரவி… சினிமா கேரியரை காலி செய்யும் மாமியார்..

0
Follow on Google News

முதல் படமே வெற்றிப் படமாக அமைய வேண்டும் என ஜெயம் எனும் படத்தின் அண்ணன் இயக்கத்தில் அறிமுகமான நடிகர் ரவி தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கை ஜெயமாக அமைய வேண்டும் என்பதால் ஜெயம் ரவி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.‌ தொடர்ந்து ரீமேக் படங்களில் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்து வந்த ஜெயம் ரவி தனி ஒருவன் படத்திற்கு பிறகு தாறுமாறாக சோலோ ஹீரோவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படம் தான். அந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஒரு சோலோ ஹிட் வெற்றியைக் கூட கொடுக்கவில்லை என அவரது ரசிகர்களே வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் ரோல் ஆன பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் ஜெயம் ரவி முதல் பாகமே 500 கோடி ரூபாய் வரை வசூல் இருந்தது. இந்த ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் பெரிய அளவில் சொதப்பிய நிலையில் 300 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.

சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன். ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளி பாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அந்தப் படத்தில் நடித்த நிலையில் அது ஜெயம் ரவியின் சோலோ படமாக கருதப்படவில்லை.இந்த ஆண்டு வெளியான அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் ஜெயம் ரவி ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளதாகவும் நல்ல கதைகளை தேர்வு செய்து ஜெயம் ரவி ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன், ஜீனி, பிரதர் மற்றும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தனி ஒருவன் 2 படத்தின் மீதுதான் ரசிகர்கள் ஒட்டுமொத்த நம்பிக்கையும் வைத்துள்ளனர் என்கின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம்.

அந்த கதை மிகவும் அருமையாக இருந்ததாம். ஆனால், பட்ஜெட் மிகவும் பெரிதாக வரும் என்பதால் ஜெயம் ரவி யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு எனும் பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படத்தை இயக்கினால் கண்டிப்பா ஹிட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவியின் படங்களை அவரின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் தயாரித்து வருகிறார். எனவே கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவியின் மாமியாரிடம் சென்று கதையை கூறியுள்ளார். அவர் பட்ஜெட் அதிகமாக உள்ளது இவ்வளவு காசு என்னால் போட முடியாது, வேறு கதை கொண்டுவா என்று கூறிவிட்டாராம். ஜெயம் ரவியின் மாமியார் நினைத்தால் வேறு தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்யலாம். ஆனால் அவர் அதையெல்லாம் செய்வதே இல்லை. மாறாக வருகின்ற கதை எல்லாம் ரிஜெக்ட் செய்து கொண்டு உள்ளார்.

இதனால் ஜெயம் ரவியின் கரியரை முடிந்து விடும் என்று பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவி வேற இயக்குனர் கதை சொல்ல வந்தால் அதை மாமியார் தான் தயாரிப்பார் என்று சொல்கிறாராம். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் தான் இருக்குமாம். இந்த ஒரு விஷயத்தினால் எந்த ஒரு இயக்குனரும் இவரை தேடி போவதில்லை. இப்படியே தொடர்ந்து போனால் ஜெயம் ரவி கூடிய விரைவில் சினிமாவில் இருந்து பீல்ட் அவுட் ஆகும் நிலைமை வந்து விடும் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.