யாருகிட்ட மோதுகிற… நேரம் பார்த்து ஆப்பு வைத்த தனுஷ்… இத்தோடு சிவகார்த்திகேயன் சினிமா கேரியரை முடிக்கணும்…

0
Follow on Google News

விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சிறிது நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். ஒவ்வொரு முறை அவரின் படம் வெளியாகும்போதும் இந்த பஞ்சாயத்து அவரின் கழுத்தை பிடிப்பதுண்டு. ஆனால், எதையாவது செய்து தப்பித்து வருகிறார். ஒருபக்கம், சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி அவரை காலி செய்துவிட்டது.

இமானின் விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான் என எல்லோரும் பேச அவரின் இமேஜ் ரசிகர்களிடம் மொத்தமாக டேமேஜ் ஆனது. ஒருபக்கம், இமான் சொன்ன குற்றச்சாட்டால் அவரின் வீட்டிலும் பிரச்சனை என சொல்லப்படுகிறது. மனைவி மற்றும் உறவினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறாராம். அதோடு, வெளியே எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சிவகார்த்திகேயன் அவருக்கு வரும் செல்போன் அழைப்புகளை கூட எடுப்பது இல்லையாம்.

கமலின் தயாரிப்பில் அவர் நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் அப்படியே நிற்கிறது. சிவகார்த்திகேயன் இந்த பிரச்சனையால் தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நிலையில் தீபாவளி அன்று சிவகாத்திகேயன் அயலான் படம் ரிலீஸ் ஆக இருந்தது. இந்த சர்ச்சையினால் அந்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தான் அயலான்.

இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன்பக்கம் திரும்பிப்பார்க்க செய்த ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. மேலும் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்தார். ஏலியன் பற்றிய கதையம்சம் கொண்ட படமாக உருவான இப்படம் ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகவுள்ளது.

VFX பணிகள், நிதி நெருக்கடிகள் என பல விஷயங்களை தாண்டி இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது
அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் அதே நாளன்று சூப்பர் ஸ்டாரின் லால் சலாம் படமும் விக்ரமின் தங்கலான் படமும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென்று லாட்டரி அடித்தது போன்று சிவ கார்த்திகேயனுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்தது.

அதன்படி இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என்று அறிவித்தனர். இதனால் சிவகார்த்திகேயன் நிம்மதி மூச்சு விட்டார்.ஆனால் அதற்கு ஆப்பு வைத்துள்ளார் தனுஷ்.
அதாவது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் நேரடியாக மோதவுள்ளது ரசிகர்களின் ஹைப்பை ஏற்றியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே பனிப்போர் நிலவி வருவதாக பேசப்பட்டு வருகின்றது. இருவரும் பேச்சுவார்த்தை இன்றி பிரிந்து இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும் இணையத்தில் அவ்வப்போது இவர்களின் பழைய பேட்டிகளை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ இணையத்தில் செம வைரலானது.

அந்த வீடியோ சிவகார்த்திகேயன் நடிப்பில் தனுஷின் தயாரிப்பில் வெளியான காக்கிசட்டை படத்தின் போது எடுக்கப்பட்டது. காக்கிசட்டை இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், அடுத்த தனுஷ் போல ஆக விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த தனுஷ், இந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்கமாட்டேன் சிவகார்த்திகேயன். இந்த இடத்திற்கு வருவதற்கு நான் அவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கின்றேன் என ஜாலியாக பேசியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது