தப்பு செய்துவிட்டேன்… மாமனார் ரஜினியை நினைத்து கண்கலங்கிய தனுஷ்… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் – தனுஷ் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக சிறு சிறு சண்டைகள் நடந்து வந்த நிலையில், இவர்களின் மோதல் உச்ச கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்து, கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக முன்கூட்டியே ரஜினிகாந்திடம் தகவல் சொன்ன போது அதில் ரஜினிகாந்துக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

இருந்தும் ரஜினியின் விருப்பத்துக்கு எதிராக இவர்கள் பிரிந்தது மிகப்பெரிய மன உளைச்சலை ரஜினிக்கு கொடுத்ததாக கூறப்பட்டது. இரண்டு பேரக் குழந்தைகளின் நலன் கருதி, மகளும் மருமகனும் மீண்டும் இணைய வேண்டும் என ரஜினிகாந்த் விருப்பம் தெரிவிக்க, இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் பிரிந்த தம்பதியரை இணைக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது.

ரஜினிகாந்த்க்கு மருமகன் தனுஷ் மீது ஒரு தனிப்பட்ட மரியாதையும் பாசமும் உண்டு, அதே போன்று தனுசுக்கும் மாமனார் ரஜினிகாந்த் மீது மதிப்பு மரியாதையும் கொண்டவர். 2011ம் ஆண்டு ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, உடன் இருந்து மகன் போன்று மாமனாரை பார்த்து கொண்டவர் தனுஷ். அந்த கால கட்டத்தில் ரஜினி குடும்பபத்தினர் அனைவர்க்கும் துணையாக இருந்தவர் தனுஷ்.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்குப் பின்பு சில நடிகர்கள் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த போது, மாமனார் ரஜினிக்கு ஆதரவாக காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் குரல் கொடுத்தவர் மருமகன் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த். நான் பணம், புகழ், பெயர் என மிகப் பெரிய உச்சத்தில் இருந்தாலும், என் வாழ்வில் 10% கூட நிம்மதி இல்லை என உருக்கமாக பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு அரங்கில் இருந்த பலரை கண்கலகச் செய்தது, இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் சமீபத்தில் தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களில் ரஜினிகாந்த் பேசியிருந்த பேச்சு குறித்து மனம் விட்டு வேதனையை வெளிப்படுத்தியுள்ளார், நானும் எனது மனைவியும் பிரிந்ததை மனதில் வைத்து தான் மாமனார் ரஜினிகாந்த், அவருடைய வாழ்க்கையில் பத்து சதவீதம் கூட நிம்மதி இல்லை என உருக்கமாக பேசி இருக்கிறார்.

நான் தான் தப்பு செய்து விட்டேன், மனைவியுடன் நான் சற்று கொஞ்சம் விட்டுக்கொடுத்து அமைதியாக இருந்திருக்க வேண்டும், மனைவி விருப்பத்திற்கு ஏற்ப அவசரப்பட்டு பிரிவதாக அறிவித்து விட்டேன், என மாமனார் எங்களை நினைத்து தான் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று பேசியிருக்கிறார் என கண்கலங்கிய தனுஷ், அவருடைய நெருங்கிய நட்பு வட்டாரத்தில் மிக வேதனையுடன் பேசியதாக கூறப்படுகிறது.

நீங்க தான் காப்பாத்தணும்.. ராஜமௌலியிடம் கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… எதற்கு தெரியுமா.? https://youtu.be/zSiBPn-m-QY