சிறைக்கு செல்லும் பயில்வான்…. மீனா குறித்து தவறான பேச்சு…. என்ன சொன்னார் தெரியுமா.?

3
Follow on Google News

பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சினிமா கிசு கிசுக்களை யூ டுயூப்பில் பேச தொடங்கிய பின்பு தான் பிரபலமானார். தொடர்ந்து சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய அந்தரங்க விசயங்களை வெளியில் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர் பயில்வான் ரங்கநாதன், ஆனால் கடும் எதிர்ப்புகள் வந்தால் கூட அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவருடைய வேலையை செய்து வருகின்றவர்.

நடிகை கஸ்தூரி, மற்றும் நடிகை ராதிகா குறித்து பயில்வான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது, தன்னை பற்றி பயில்வான் பேசியதற்கு பதிலடி தரும் விதத்தில் நடிகை கஸ்தூரி பதில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் பயில்வானை பன்றி என்றும், நீ விளக்கு பிடித்தாயா என கடுமையாக பேசினால், ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாத பயில்வான் மீண்டும் கஸ்தூரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில தகவலை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து பயில்வான் பேசியதற்கு பதில் பேசினால், அல்லது ஏதவாது நடவடிக்கை எடுக்க முயன்றால் மேலும் நம்மை பயில்வான் அசிங்க படுத்திவிடுவார் என தயக்கத்தில் பயில்வான் என்ன பேசினாலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்வதில்லை. ஒருமுறை நடிகை ராதிகா தயார் பற்றி தவறாக பயில்வான் பேசிய அடுத்த சில நாட்களில் திருவான்மியூர் கடல்கரையில் பயில்வான் மற்றும் ராதிகா இருவருக்கும் உச்சகட்ட சண்டை ஏற்பட்டது.

ஆனால் பயில்வான் என் மீது வழக்கு பதிவு செய் என கூறிவிட்டார். எப்படி யாருக்கும் கட்டுப்படாமல் சினிமாவில் நடக்கு பல கிசு கிசு சம்பவங்களை வெளியில் பேசி வரும் பயில்வான், சமீபத்தில் நடிகை மீனா கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசினார், குறிப்பாக கணவர் விருப்பத்துக்கு எதிராக மீனா நடந்து கொண்டதாகவும், அதனால் அவருடைய கணவர் மன உளைச்சலில் இருந்தது போன்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பயில்வான்.

மீனா கணவர் மருத்துவ சான்றிதழை வெளியிட வேண்டும், அவருக்கு ஏன் அவசரமாக நூரையீரல் மாற்று சிகிச்சை செய்யவில்லை என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார் பயில்வான். இது சினிமா துறையினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இளம் வயதில் கணவனை இழந்து சோகத்தில் இருக்கும் மீனாவை மேலும் புண்படுத்தும் விதத்தில் பேசிய பயில்வான் மனிதன் தானா.? என்று சினிமா துறையினர் கடுமையாக பேசி இருந்தனர்.

இதனை தொடர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ஏன சினிமா துறையை சேர்ந்த ஒரு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தலைமையில் சமீபத்தில் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனை இறுதியில் பயில்வான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளுவதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளில் அந்த பிரபல தயாரிப்பாளர் தலைமையிலான ஒரு குழு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தன்னை காப்பாற்ற பின்வாசல் வழியே நுழையும் ரஜினிகாந்த்… தஞ்சை பெரிய கோவிலில் என்ன இருக்கு தெரியுமா.?

3 COMMENTS

  1. நடிகை மீனா கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பது 100% உண்மைதான் பயில்வான் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்

  2. எது எப்படி இருந்தாலும் இறந்து போன மீனா அவர்களின் கணவர் ஆத்மா அமைதி கொள்ளட்டும்‌.மீனா அவர்கள் நம் குழந்தை மற்றும் சகோதரி போன்றவர். அவரை விமர்சனத்திற்கு உட்படுத்தி அதில் குளிர் காய வேண்டாமே!

Comments are closed.